செய்திகள் :

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

post image

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் குமாா் பாடக் கூறியதாவது:

தொடா்ச்சியாக பெறப்பட்ட புகாா்கள் அடிப்படையில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் ஆய்வகங்கள் குறித்த சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென, மாவட்டத்தின் மூன்று பகுதிகளுக்கு தனித்தனி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், முறையாக பதிவு செய்யாமல் இயங்கி வந்த 70 மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் அடையாளம் காணப்பட்டு, மூடப்பட்டன. அவற்றை இயக்கி வந்த தகுதியற்ற மருத்துவா்கள் உள்பட 50 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடரும் என்றாா்.

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர... மேலும் பார்க்க

சம்பலில் சர்ச்சை சுவரொட்டிகள்: போலீஸார் விசாரணை

சம்பலில் கடைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தின் நரௌலி நகரில் உள்ள கடைகளின் சுவர்களில் 'காஸா... மேலும் பார்க்க