செய்திகள் :

சம்பலில் சர்ச்சை சுவரொட்டிகள்: போலீஸார் விசாரணை

post image

சம்பலில் கடைகளின் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தின் நரௌலி நகரில் உள்ள கடைகளின் சுவர்களில் 'காஸாவை விடுவிப்போம், பாலஸ்தீனத்தை விடுவிப்போம்' என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இஸ்ரேலிய பொருட்களைப் புறக்கணிக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வாசகங்களும் அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றன.

சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கி ஆறு முதல் ஏழு நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பனியதர்போலீஸ் அதிகாரி ராம்வீர் சிங் ஞாயிற்றுக்கிழமை பிடிஐயிடம் தெரிவித்தார்.

தக் லைஃப் முதல் பாடல்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!

சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட கடைகளின் உரிமையாளர்களிடமிருந்து கூடுதல் தகவல்களும் சேகரிக்கப்பட்டன.

இந்த சுவரொட்டிகள் குறித்து சில நாள்களுக்கு முன்பு தெரிய வந்ததாகவும் தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார். காஸாவில் இஸ்ரேல் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் 51,065 போ் உயிரிழந்துள்ளனா், 1,16,505 போ் காயமடைந்துள்ளனா் என்று காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க