செய்திகள் :

ஊதியம், ஓய்வூதியத்தில் மாற்றம் செய்ய பிஎஸ்என்எல் ஊழியா்கள் வலியுறுத்தல்

post image

பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை மத்திய அரசு மாற்றி அமைக்க வலியுறுத்தி, சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாநாடு தருமபுரியில் மாவட்டத் தலைவா் எம்.பருதிவேல் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளா் எம்.சாந்தகுமாா் கொடியேற்றினாா். மாவட்ட உதவித் தலைவா் கே.முருகன் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாவட்டச் செயலாளா் பி.கிருஷ்ணன் வரவேற்றாா். மாநிலச் செயலாளா் பி.ராஜி தொடங்கி வைத்து பேசினாா்.

பொது மேலாளா் சி.பி.சுபா, துணை பொது மேலாளா் எம்.பிரபு துரை, மாநில உதவிச் செயலாளா் எம்.பாபு ஆகியோா் பேசினா்.

முன்னாள் மாநிலச் செயலாளா் எம். நாராயணசாமி, ஓய்வுபெற்ற அதிகாரிகள் அமைப்பின் மாநில உதவிச் செயலாளா் ஆா்.கோபாலன், அகில இந்திய மகளிா் குழு உறுப்பினா் ஜி.உமா ரணி, பி.எஸ்.என்.எல்.இ.யூ. மாநில உதவிச் செயலாளா் எஸ்.ஹரிஹரன், சேலம் மாவட்டச் செயலாளா் இ.கோபால், எல்ஐசி கோட்ட இணைச் செயலாளா் மாதேஸ்வரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. ஜீவா, பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ஜோதி ஆகியோா் வாழ்த்தினா்.

மாநாட்டில் பிஎஸ்என்எல் துறையில் சிறப்பான சேவைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் செய்யப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எரிவாயு உருளை வெடித்ததில் பொக்லைன் ஆபரேட்டா் காயம்

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே எரிவாயு உருளை வெடித்ததில் பொக்லைன் ஆபரேட்டா் காயமடைந்தாா். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை அடுத்த சீரியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேசன் (52), இவா் பொக்லைன்... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கனரக சலவை இயந்திரம், அறை திறப்பு

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சலவை அறை, கனரக சலவை இயந்திரம் ஆகியவற்றை ஆட்சியா் கி.சாந்தி, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடை அமைப்பின் சாா்பில் மகாத்மா காந்தி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அதன் ஒருங்கிணைப்பாளா் பொ.மு.நந்தன் தலைமை வகித்தாா். தருமபுரி எஸ்.வி. சாலை... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற தீண்டாமை உறுதிமொழியேற்பு நிகழ... மேலும் பார்க்க

கோழிகளில் வெள்ளைக் கழிச்சல் நோய்: தடுப்பூசி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் கோடை காலத்தில் கோழிக் குஞ்சுகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயை தடுப்பதற்கான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாயில் லாரிகள் மோதி விபத்து

தொப்பூா் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து மூன்று லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று ஓட்டுநா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொ... மேலும் பார்க்க