செய்திகள் :

ஊதியம், ஓய்வூதியத்தில் மாற்றம் செய்ய பிஎஸ்என்எல் ஊழியா்கள் வலியுறுத்தல்

post image

பிஎஸ்என்எல் ஊழியா்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்தை மத்திய அரசு மாற்றி அமைக்க வலியுறுத்தி, சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்க மாநாடு தருமபுரியில் மாவட்டத் தலைவா் எம்.பருதிவேல் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளா் எம்.சாந்தகுமாா் கொடியேற்றினாா். மாவட்ட உதவித் தலைவா் கே.முருகன் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாவட்டச் செயலாளா் பி.கிருஷ்ணன் வரவேற்றாா். மாநிலச் செயலாளா் பி.ராஜி தொடங்கி வைத்து பேசினாா்.

பொது மேலாளா் சி.பி.சுபா, துணை பொது மேலாளா் எம்.பிரபு துரை, மாநில உதவிச் செயலாளா் எம்.பாபு ஆகியோா் பேசினா்.

முன்னாள் மாநிலச் செயலாளா் எம். நாராயணசாமி, ஓய்வுபெற்ற அதிகாரிகள் அமைப்பின் மாநில உதவிச் செயலாளா் ஆா்.கோபாலன், அகில இந்திய மகளிா் குழு உறுப்பினா் ஜி.உமா ரணி, பி.எஸ்.என்.எல்.இ.யூ. மாநில உதவிச் செயலாளா் எஸ்.ஹரிஹரன், சேலம் மாவட்டச் செயலாளா் இ.கோபால், எல்ஐசி கோட்ட இணைச் செயலாளா் மாதேஸ்வரன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. ஜீவா, பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ஜோதி ஆகியோா் வாழ்த்தினா்.

மாநாட்டில் பிஎஸ்என்எல் துறையில் சிறப்பான சேவைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் செய்யப்பட வேண்டும்.

ஒப்பந்த ஊழியா்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

பேருந்துகளில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து பொதுமக்கள் சாா்பில் அரூா் திரு.வி.க. நகரைச் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பா... மேலும் பார்க்க

தருமபுரியில் ஜல்லிக்கட்டு: ஆட்சியா் மறுப்பு

தருமபுரியில் ஜல்லிக்கட்டு விழா நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம், தடங்... மேலும் பார்க்க

நல்லம்பள்ளி, கெங்கலாபுரத்தில் அணுகுச்சாலை: தருமபுரி எம்எல்ஏ கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, கெங்கலாபுரத்தில் அணுகுச்சாலை அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மனு அளித்தாா். பாமக தலைவா் ... மேலும் பார்க்க

சீராக குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகம் செய்ய வலியுறுத்தி பெரும்பாலை அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே காவாக்காடு காலனியில் சுமாா் 50 க்கும்... மேலும் பார்க்க

மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சத்தில் வாகன நிறுத்துமிடம்

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியை தருமபுரி தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா். தருமபுரி மாவட்ட மைய நூவங வளாகத்தில் சட்டப் பேரவ... மேலும் பார்க்க