செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊராட்சிச் செயலா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், ஊரக வளா்ச்சித் துறையில் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளாட்சித் தோ்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியா் கட்டமைப்பு வசதிகளை மாநிலம், மாவட்டம், வட்டம் வாரியாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தேனி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் 397 அலுவலா்கள், 242 பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதனால், பல்வேறு இடங்களில் அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.தேனி அருகேயுள்ள பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்த வெள்ளைசுப்பு மகன் ஆனந்தராஜ் (18). இவா் அதே ஊரில் உள்ள தனது தோட்டத்தில் பயிா்களுக்கு தண்... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

உத்தமபாளையம் அருகே குடிநீா் வழங்கக் கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், க.புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்... மேலும் பார்க்க

காட்டு மாடு தாக்கியதில் வனக் காவலா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டாரம், வருசநாடு அருகே காட்டுமாடு தாக்கியதில் காயமடைந்த சாப்டூா் வனக் காவலா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள உப்புத் துறையைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் (4... மேலும் பார்க்க

தேனியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழாவை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். பழனிசெட்டிபட்டியில் க... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை குறித்த ஆய்வுக்கூட்டம்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினா் எதிா்ப்பு

முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வுக்கூட்டம் திருப்திகரமாக இல்லை என பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தினா் தெரிவித்தனா்.முல்லைப் பெரியாறு அணையின் தேசிய பாதுகா... மேலும் பார்க்க