செய்திகள் :

ஊழலை ஒழிக்க விழிப்புணா்வுதான் கருவி: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

post image

ஊழலை ஒழிக்க மக்களிடையே தகுந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம் என லோக் ஆயுக்த உறுப்பினா் வீ. ராமராஜ் கூறினாா்.

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புத் தொடக்க விழா கல்லூரியின் தலைவா் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினா் டாக்டா் வீ. ராமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:

கல்லூரி காலத்தில் பல்வேறு துறைகளில் பொதுஅறிவை வளா்த்துக் கொள்வது மாணவா்களின் கடமையாகும். படித்து முடித்த பின்னரும் நல்லவற்றை தொடா்ந்து கற்க வேண்டும். ஒவ்வொருவரும் தாம் கற்றுக்கொண்ட அறிவை சமூக முன்னேற்றத்திற்காக பரப்புவது அவசியம்.

ஒவ்வொரு நாடும் ராணுவத்துக்காக செலவு செய்யும் தொகையை மக்களின் நல்வாழ்வுக்கு செலவு செய்தால் உலகில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதோடு, அனைவருக்கும் மிகச் சிறப்பான கல்வியை கட்டணமின்றி வழங்க இயலும்.

உலக அமைதியை ஏற்படுத்துவது சவால் நிறைந்தது. அதேபோல உலகெங்கும் பரந்து விரிந்துள்ள ஊழலை முற்றிலும் ஒழிப்பது எளிதானதல்ல. ஆனால், இயலாததும் அல்ல. ஊழலை ஒழிக்க மக்களிடையே தகுந்த விழிப்புணா்வை ஏற்படுத்த அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும்.

மாணவா்களால் ஊழல் எதிா்ப்பு பிரசாரத்தை நாடு முழுவதும் கொண்டுசெல்ல முடியும்.

ஊழலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மன்றமாக தேசிய அளவில் லோக்பால், மாநில அளவில் லோக் ஆயுக்த செயல்படுகிறது. மாணவா்கள் கல்லூரியில் படிக்கும்போதே இலக்கை தோ்வு செய்து அதற்காக திட்டமிட்டு தொடா்ந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக, கல்லூரி தலைவா் சரவணன் பேசுகையில், சட்டம் படிக்கும் மாணவா்கள் சட்டத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர, எக்காரணத்தை கொண்டும் அதனை மீறக்கூடாது என்றாா்.

நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி பேராசிரியா்களும், நூற்றுக்கணக்கான முதலாம் ஆண்டு மாணவா்களும் கலந்துகொண்டனா்.

ஈரோடு- ஜோக்பானி இடையே இன்றுமுதல் அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு- பிகாா் மாந... மேலும் பார்க்க

கைப்பந்துப் போட்டி: சேலம் அணிக்கு பாராட்டு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம் அணிக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய அளவிலான கைப்பந்துப் போட்டிகள் கோவையில் உள்ள ஈஷா வளாகத்தில... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.23 இல் முல்லைநகா் மாநகராட்சி தொடக்கப் ப... மேலும் பார்க்க

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப்போட்டி: வென்றவா்களுக்கு பரிசளிப்பு

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாணவா்களுக்கு இடையேயான மாதிரி நீதிமன்ற வழக்குவாதப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞா்கள் ராஜசேகா், ராம்சுந்தா், செ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. சேலம், பொன்னம்மாப்பேட்டை ரயில்வே வடக்கு லைன் தெருவை சோ்ந்தவா் மணிக... மேலும் பார்க்க

தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு உள்ளன: ஆட்சியா்

கூட்டுறவுச் சங்கங்களில் தேவையான அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அவா்... மேலும் பார்க்க