செய்திகள் :

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

post image

கர்நாடகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியர்களைக் கட்டுப்போட்டு கொள்ளையர்கள் பணம், நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு நடந்துள்ளது. நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் முகமூடி அணிந்த மூன்று பேர் வங்கிக்குள் நுழைந்தனர். அங்குள்ள ஊழியர்களைக் கட்டிப்போட்டு ரூ. 20 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

வங்கி அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, மொத்தம் ரூ. 21 கோடிக்கு மேல் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஒரு கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் சுமார் 20 கிலோ எடையுள்ள தங்க நகைகளுடன் அவர்கள் தப்பிச் சென்றதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 கிலோ தங்க நகையின் மதிப்பு சுமார் ரூ. 20 கோடியாகும்.

வங்கி மேலாளரின் புகாரின் அடிப்படையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர், மேலும் சந்தேக நபர்களைப் பிடிக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் விஜய்புரா காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மன் நிம்பர்கி, சந்தேக நபர்கள் போலி எண் தகடு கொண்ட சுசுகி மின் வாகனத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சியின்படி மர்ம கும்பல் மகாராஷ்டிரத்தில் உள்ள உள்ள பந்தர்பூர் நோக்கிச் சென்றுள்ளனர்.

மேலும், விசாரணை நடந்து வருகிறது. சந்தேக நபர்களைப் பிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Three masked men armed with country-made pistols and knives allegedly robbed a nationalised bank in this district, making off with over Rs 20 crore in cash and gold ornaments, after tying up the staff, police said on Wednesday.

இதையும் படிக்க:தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில், 2 பெண் நக்சல்கள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். எட்டப்பள்ளி தாலுக்காவில் உள்ள மொடாஸ்கே கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதா... மேலும் பார்க்க

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

சுதந்திர இந்தியா 100 வயதை அடையும் போதும், இந்தியாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை... மேலும் பார்க்க

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி அவருக்... மேலும் பார்க்க

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்த செய்யறிவு(ஏஐ) சர்ச்சை விடியோவை உடனடியாக நீக்குமாறு காங்கிரஸூக்கு பாட்னா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்த... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

கோவா மாநிலம் கனகோனாவைச் சேர்ந்த 59 வயது முதியவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடியால் பலரும் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வ... மேலும் பார்க்க

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்ப... மேலும் பார்க்க