செய்திகள் :

எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: நிதின் கட்கரி!

post image

அமெரிக்காவைவிட இந்தியாவில் சிறந்த உள்கட்டமைப்பு இருப்பதாக சில அமெரிக்கர்களே தன்னிடம் சொன்னதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை தொடர்பான ஏஎன்ஐ நேர்க்காணல் ஒன்றில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை பேசியிருந்தார்.

அப்போது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையான சாலை வசதிகள் இந்தியாவில் தரம் உயர்த்தப்படும் என்றும், தற்போது பார்ப்பது ரீல்ஸ் மட்டுமே, இனிதான் ’மெயின் பிக்சரை’ பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசியதாவது:

”பாஜக அரசால் அமைக்கப்பட்ட நல்ல சாலைகளால் இந்தியாவில் தளவாடச் செலவுகள் குறைந்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்தால், விவசாயம், உற்பத்தி, சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மேம்படும்.

சீனாவில் தளவாடச் செலவுகள் 8%, அமெரிக்கா மற்றும் ஐரோப்ப நாடுகளில் 12% ஆக இருக்கும் நிலையில், மோசமான சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து நெரிசலால் இந்தியாவில் 16 சதவிகிதமாக இருந்தது.

பாஜக தலைமையிலான அரசு சாலைகளை மேம்படுத்தியதால், தளவாடச் செலவுகள் 9 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதனால், ஏற்றுமதியின் போட்டித்தன்மை மாறியுள்ளது.

தற்போது, 25 பசுமைவழி விரைவுச் சாலைகள், 3,000 கி.மீ துறைமுக இணைப்பு நெடுஞ்சாலை மற்றும் மத சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே 36 சுரங்கப் பாதைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 23 நிறைவடைந்துள்ளன, மேலும் 5 சுரங்கப்பாதைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன.” எனத் தெரிவித்தார்.

உலகில் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மொத்தம் 1.46 லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டவை.

பிப்ரவரி 2025இல் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2004 இல் 65,569 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலை, 2014 இல் 91,287 கி.மீ. ஆகவும், 2024 இல் 1,46,145 கி.மீ. ஆகவும் விரிவடைந்துள்ளது.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகளைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் 2014 இல் 18,371 கி.மீ. ஆக இருந்து 2024 இல் 48,422 கி.மீ. ஆக 2.6 மடங்கு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க : தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றது எப்படி? அதிர்ச்சித் தகவல்கள்...

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க

என்ஜின் செயலிழப்பு, பறவை மோதல் விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் -விமானத் துறை நிபுணா்கள்

‘இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அவா்கள் ம... மேலும் பார்க்க

இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது: பிரதமா் மோடி

‘மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு எண்ணற்ற பலன்களைக் கொண்டுவந்துள்ளது; இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் புரட்சிகரமானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரி... மேலும் பார்க்க

சுழற்சி முறையில் மருத்துவத் துறை தலைவா்கள்: என்எம்சி திட்டம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவத் துறை தலைவா் பொறுப்புகளில் சுழற்சி முறையில் பேராசிரியா்களை நியமிப்பதற்கான வரைவு விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்... மேலும் பார்க்க