செய்திகள் :

எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தி பெண்ணுக்கு வரதட்சிணை வன்கொடுமை!

post image

சாஹரான்பூர்: வரதட்சிணைக் கொடுமையின் உச்சமாக இளம்பெண்ணுக்கு எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சோனல் என்ற பெண்ணுக்கு உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருடன் திருமணமான நிலையில், மணமகனுக்கு வரதட்சிணையாக பணம், நகையுடன் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளர் மணமகளின் தந்தை.

எனினும், இவை மட்டும் போதாது, வரதட்சிணை இன்னும் அதிகமாக தர வேண்டுமென மணமகனின் குடும்பத்தார் நிர்பந்தப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மணமகள் வீட்டார் தரப்பிலிருந்து கூடுதலாக ரூ. 25 லட்சமும், பெரிய ரக கார் ஒன்றையும் வாங்கித் தர வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மேற்கண்ட நிபந்தனைகளை மணமகள் வீட்டார் நிறைவேற்றாத நிலையில், மணமகன் வீட்டில் புதுப்பெண்ணுக்கு மன ரீதியிலும் உடல் ரீதியிலும் பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

அந்த பெண்ணை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய மணமகன் வீட்டார், அதற்கு முன் அந்த பெண்ணின் உடலில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரத்தத்தையும் செலுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெண் வீட்டார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், அந்த பெண்ணின் கணவர், கணவரின் சகோதரர் உள்பட நால்வர் மீது வரதட்சிணை வன்கொடுமை வழக்குப்பதிந்துள்ள காவல் துறை அதிகாரிகள் அவர்களிடன் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் விபத்து: 5 பேர் பலி

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜீப் வாரணாசி அருகே இன்று(வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானதில் கர்நாடகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்நாடகத்தின் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 ... மேலும் பார்க்க

கார் விபத்தில் இறந்தவர்களின் உடல்கூறாய்வில் அதிர்ச்சி! கொலையா?

அண்மைக் காலமாக, தொழிலதிபர்கள் குடும்பத்துடன் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல கொலை, தற்கொலை என வ... மேலும் பார்க்க

தில்லி கூட்ட நெரிசல்: எக்ஸ் தளத்தில் விடியோக்களை நீக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பான விடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்குமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா க... மேலும் பார்க்க

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகன்!

வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் புனித நீராடச் சென்ற மகன் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் சப்... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் செல்ல முடியாத சிறைக் கைதிகளுக்கு.. உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு!

உத்தரப் பிரதேசத்தி்ன், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத சிறைக் கைதிகளுக்கு உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சௌகான் க... மேலும் பார்க்க