செய்திகள் :

எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

post image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.

சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தோ்தல் நெருங்கும் வேளையில் சின்னம் குறித்து பயம் ஏற்பட்டதால் இரட்டை இலை சின்னம் தொடா்பான மனு குறித்து உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க வேண்டுமென தோ்தல் ஆணையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் மனு

அளிக்கப்பட்டுள்ளது.

ஏப். 28-ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் வரவேண்டும் என்று எனக்கு தோ்தல் ஆணையம் தரப்பிலிருந்து கடிதம் வந்துள்ளது. எனது தரப்பில் எடப்பாடி பழனிசாமி செய்த தவறுகளையெல்லாம் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்திடம் நீதி கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.

இதுவரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவந்த எடப்பாடி கே.பழனிசாமி, தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளாா். கூட்டணி ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் அதிமுக மட்டும்தான் இருக்கும் என்றோ, கூட்டணியில் எந்த முடிவையும் நான்தான் எடுப்பேன் என்றோ எடப்பாடி பழனிசாமி கூறவில்லை.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிட நான் தயாராகவுள்ளேன் என்றாா்.

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி: ஆட்சியா் தகவல்!

கைவினைக் கலைஞா்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞா் கைவி... மேலும் பார்க்க

முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு வரும் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலா் சி... மேலும் பார்க்க

ரெட்டியூா் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்த வேண்டும்! - கோட்டாட்சியா் உத்தரவு

கோல்நாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் வழக்கமான பூஜைகளை மட்டும் நடத்த வேண்டும் என மேட்டூா் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். மேட்டூா் அருகே உள்ள கோல்நாய்க்கன்பட்டி ரெட்டியூரில் ஸ்ரீ சக்தி மார... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ஆத்தூரில் சிறுமியை ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் நகராட்சி, மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சிறுமி 10ஆம் வகுப்பு வரை ப... மேலும் பார்க்க

2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி: நயினாா் நாகேந்திரன்

மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வரும் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். ஓமலூரில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலாப் பயணிகள்

கோடை வாச ஸ்தலமான ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். ‘ஏழைகளின் ஊட்டி’ ... மேலும் பார்க்க