செய்திகள் :

``எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இப்படி பேசுகிறார்'' - செல்லூர் ராஜூ

post image

மதுரை மேற்குத் தொகுதியில் நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தால் அனைவரும் வேதனையில் உள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

பாஜக, அதிமுக கூட்டணி குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அது குறித்த கேள்விகளை எங்கள் பொதுச்செயலாளரிடம் கேளுங்கள். அமித்ஷாவிடம் பேசியதையும், கூட்டணி குறித்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக பேசியுள்ளார்.

ஒரு முன்னாள் அமைச்சரை தரக்குறைவாகவும், கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஸ்டாலினுக்கு மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொது விழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

தமிழக மக்கள் இவர் பேச்சை கடுமையாக கண்டித்து வருகிறார்கள், இந்த போக்கை முதல்வர் மாற்றிக் கொள்ள வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீது நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மதுரை அழகாக காட்சியளிக்க, 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள்தான் காரணம். மன்னர்கள் காலத்திற்குப் பிறகு குடிமராமத்து திட்டத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார்.

அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்குத் தொகுதியில் பல்வேறு திட்டங்களை செய்து வருவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும், மத்திய அரசின் திட்டங்களுக்குதான் திமுக அரசு தனது லேபிளை ஒட்டி வருகிறது" என்றார்.

Israel Vs Iran: ``Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

கடந்த சில நாள்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இர... மேலும் பார்க்க

``வரும் தேர்தலில் திருச்சியில் போட்டி; நடிகர் விஜய் மனசு..'' - திருநாவுக்கரசர் தடாலடி

ராகுல் காந்தி பிறந்த நாள்: வேலைவாய்ப்பு முகாம்நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி-யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகமான அருணாச... மேலும் பார்க்க

`திருமாவளவன் பேரணியில் ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி மறுப்பு' - காவல்துறை சொன்ன காரணம்

திருச்சி மாநகரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.டி.வி.எஸ் டோல்கேட் பக... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிய ECG டெஸ்ட் மட்டுமே போதுமா?

Doctor Vikatan: ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இசிஜி டெஸ்ட் மட்டுமே போதுமானதா, ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை அதில் கண்டறிய முடியுமா, ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாருக்குத்தேவைப... மேலும் பார்க்க

தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!

மருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இர... மேலும் பார்க்க

``அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு..'' -திமுக எம்எல்ஏ விமர்சனம்; கே.என்.நேருவின் பதில்

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நட... மேலும் பார்க்க