செய்திகள் :

என்ஐஏ, யுஏபிஏ வழக்குகள்: சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால் கைதிகளை விடுவிக்க நேரிடும்: உச்சநீதிமன்றம்

post image

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்களின் கீழ் கைதானோருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸல்கள் நிகழ்த்திய கண்ணிவெடி தாக்குதலில், மாநில காவல் துறையின் விரைவுப் படையைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து கைலாஷ் ராம்சந்தானி என்ற நக்ஸல் ஆதரவாளா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை மாநில காவல் துறையிடம் இருந்து பின்னா் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கைலாஷ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டதை போன்ற வழக்குகளில் விசாரணையை உரிய காலத்தில் நிறைவு செய்ய திறன்வாய்ந்த வழிமுறை இல்லாதபோது, எவ்வளவு காலத்துக்கு குற்றஞ்சாட்டப்பட்டவா்களை காலவரையின்றி சிறைக்காவலில் வைப்பது?

என்ஐஏ சட்டம், யுஏபிஏ சட்டம் போன்ற சிறப்பு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரிக்க தேவையான உள்கட்டமைப்புகளுடன் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அந்தச் சட்டங்களின் கீழ் கைதானோருக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மகாராஷ்டிரத்தில் என்ஐஏ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைக்கத் தவறினால், அடுத்த விசாரணையின்போது மனுதாரருக்கு ஜாமீன் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தது.

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸ... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது. ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை ... மேலும் பார்க்க

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ - பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்துக்கு பிறகு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் உருவெடுத்ததே ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆா்எஃப்).... மேலும் பார்க்க

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. உச்சநீதிமன்... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம்: காலநிா்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர ... மேலும் பார்க்க