செய்திகள் :

``என் பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை உள்ளது; அவர் ஒரு போராளி..'' - நடிகர் ரஜினிகாந்த்

post image

மும்பையில் இன்று முதல் நான்கு நாள்களுக்கு திரைத்துறையை சார்ந்த WAVES 2025 (World Audio Visual and Entertainment Summit) நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசியதாவது,

"பஹல்காமில் காட்டுமிராண்டித்தனமான, இரக்கமற்ற சம்பவம் நடந்தப் பிறகு, பலர் என்னிடம், 'இது பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சி என்பதால் இந்த நான்கு நாள் நிகழ்ச்சியை அரசு தள்ளிப்போடும்' என்று கூறினர்.

ஆனால், நான் இந்த நிகழ்ச்சி கட்டாயம் நடக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தேன். காரணம், எனக்கு என் பிரதமர் மோடிஜி மீது நம்பிக்கை உள்ளது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ஏனெனில் அவர் ஒரு போராளி. அவர் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வார். இதை அவர் நிரூபித்தும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதை நாம் பார்த்து தான் வருகிறோம்.

பிரதமர் காஷ்மீர் சம்பவத்தை தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். காஷ்மீரில் நிச்சயம் அமைதியையும், நம் நாட்டிற்கு பெருமையையும் கொண்டு வருவார்.

நான் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதற்கு மகிழ்ச்சியடைகிறேன். மத்திய அரசுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பேசியுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`Award-களை அள்ளிய மஞ்சுவிரட்டு படம்' - Suresh Kumar Interview! | Photographers Diary

'மஞ்சுவிரட்டில் எடுத்த புகைப்படம், மழை வெள்ள காலத்தில் பீச்சில் கிரிக்கெட் விளையாடியவர்களை எடுத்த படம்' என சர்வதேசளவில் பல்வேறு விருதுகளை அள்ளி வந்துள்ளார் The Times of india Assistant Photo Editor C.... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்னென்ன?

இதுவரை, 'சாதிய பிளவு ஏற்பட்டுவிடும்' என்று கூறிவந்த பாஜக அரசே, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளது. இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப... மேலும் பார்க்க

Vijay: அரசியல்வாதியாக முதல் செய்தியாளர் சந்திப்பு; மதுரை மக்கள் பற்றி விஜய் என்ன பேசினார்?

மதுரை புறப்பட்ட தவெக கட்சியின் தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அரசியல்வாதியாக முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில் தன்னுடைய பயண திட்ட... மேலும் பார்க்க

90 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு அறிவித்த 'சாதிவாரி கணக்கெடுப்பு'; அதன் விளக்கமும், தேவையும்!

எதிர்க்கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான 'சாதிவாரி கணக்கெடுப்பிற்கு' மத்தியில் ஆளும் பாஜக அரசு செவி சாய்த்துவிட்டது. டெல்லியில் நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறக... மேலும் பார்க்க

நயினார் கொடுத்த Files! டெல்லி சீக்ரெட்ஸ்! Udhayanidhi-யின் வித்தியாசமான Plan! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,தேமுதிக இளைஞரணி பொறுப்புக்கு வந்திருக்கும் விஜய பிரபாகரன். இதன் பின்னணியில் பிரேமலதாவின் மூன்று முக்கியமான மூவ். டெல்லிக்கு பறந்த நயினார் நாகேந்திரன் அங்கே மோடியிடம் கொடுத்த ... மேலும் பார்க்க