செய்திகள் :

'என் மனச நல்லா வச்சுக்குற டீம்ல ஆட நினைச்சேன்...' - கொல்கத்தாவை மறைமுகமாக சாடிய ஸ்ரேயாஸ் ஐயர்?

post image

'பஞ்சாப் வெற்றி!'

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களை அடித்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அவர் போட்டிக்குப் பிறகு சில முக்கியமான விஷயங்களையும் பேசியிருந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

அவர் பேசியதாவது, ''எனக்கு இதே மாதிரியான முக்கியமான பெரிய தருணங்களில் பேட்டிங் ஆடுவது பிடிக்கும். இதே மாதிரியான பெரிய போட்டிகளில் நாம் எவ்வளவு அமைதியாக இருக்க வேண்டுமோ அவ்வளவு அமைதியாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லாரிடமும் சொல்வேன். வீரர்கள் பொறுப்பை உணர்ந்து முதல் பந்திலிருந்தே இன்டன்ட்டோடு ஆட வேண்டும் என்று கூறியிருந்தேன்.

சில வீரர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அதை அவர்களால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனக்குமே ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. எனக்கு மறுமுனையிலிருந்து பேட்டர்களின் ஒத்துழைப்பு கிடைத்துக் கொண்டே இருந்தது. நான் அதிக நேரத்தை களத்தில் செலவிட்டால் நல்ல இன்னிங்ஸை ஆட முடியும் என தெரியும்.

Shreyas Iyer
Shreyas Iyer

மன ஆரோக்கியம் எனக்கு ரொம்பவே முக்கியம்!

ஆர்சிபிக்கு எதிராக நாங்கள் தோற்றதைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. சீசன் முழுக்க சிறப்பாக ஆடியிருக்கிறோம். ஒரு போட்டியை வைத்து நாங்கள் இப்படித்தான் என முடிவு செய்துவிட முடியாது. அணியில் உள்ள இளம் Uncapped வீரர்கள் மீது எதையும் திணிப்பதில்லை. அவர்கள் எப்படியோ அப்படியே இருக்க வைக்க விரும்புகிறோம். அவர்களிடம் அனுபவம் இல்லையென்றாலும், ஒருவித பயமறியா குணம் இருக்கிறது. அதுதான் எனக்கு தேவைப்படுகிறது.

PBKS
PBKS

ஏலத்தின் போது எந்த அணிக்கு செல்லப்போகிறோம் என்றெல்லாம் யோசிக்கவில்லை. நல்ல சூழல் உள்ள அணிக்கு சென்றால் போதும் என்றே நினைத்தேன். என்னுடைய மன ஆரோக்கியம் எனக்கு ரொம்பவே முக்கியம். இங்கே பஞ்சாப் அணியில் நான் ரொம்பவே சௌகரியமாக உணர்கிறேன். இந்தத் தருணத்தை கொண்டாட விரும்புகிறேன். இறுதிப்போட்டியை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. ஆனாலும் எங்களின் வேலை பாதிதான் முடிந்திருக்கிறது.' என்றார்.

'இதெல்லாம் உங்களுக்கு பெருமையா சிவக்குமாரே? - பெங்களூரு கூட்ட நெரிசலும் நுண் அரசியலும்! - ஓர் அலசல்!

'பெங்களூரு கூட்ட நெரிசல்!'ஐ.பி.எல் யை ஆர்சிபி அணி வென்றதற்காக நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான பேர் காயம்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின... மேலும் பார்க்க

Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்...' - பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் ... மேலும் பார்க்க

RCB: "இத்தனை ஆண்டுகள் தந்த ஏமாற்றங்களுக்கும் ஆறுதல் தரும்" - விராட் கோலி நெகிழ்ச்சி

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி.ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாகக் கோப்பையை வென்று தங்களுடைய 18 வருடக... மேலும் பார்க்க

RCB: "நான் பெங்களூரு அணியை தொடங்கியபோது..." - கோப்பையை வென்றது குறித்து விஜய் மல்லையா

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையைத் தன் வசப்படுத்தியிருக்கிற... மேலும் பார்க்க

RCB : 'சட்டமன்றம் டு சின்னசாமி ஸ்டேடியம்; ரோடு ஷோ நடத்தும் ஆர்சிபி!' - அப்டேட் என்ன?

'பெங்களூரு சாம்பியன்...'ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியிருந்தது. 18 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி வெல்லும் முதல் கோப்பை ... மேலும் பார்க்க