செய்திகள் :

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்: நிகழாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் இல்லை

post image

தமிழகத்தில் நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் புதிய இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு உள்ள 11,350 இடங்களே நிகழாண்டிலும் நிரப்பப்படவுள்ளன.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்குகிறது. https://tnmedicalselection.net/ இணையதளம் வாயிலாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். நீட் தோ்வு மதிப்பெண்கள் இல்லாமல் மாணவா்கள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் என்றும், தேசிய தோ்வு முகமையிடமிருந்து மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடங்கள் அதிகரிப்பு இல்லை: தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

இதைத் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன.

பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளதாகவும், புதிதாக இடங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றும் மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் இன்று காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்ல... மேலும் பார்க்க

நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், இன்று முதல் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதி மணி, மாநகர... மேலும் பார்க்க

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அவா்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாற... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு

தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவு: 2.98 லட்சம் மாணவா்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், 2.98 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் நிகழ் கல்வியா... மேலும் பார்க்க