செய்திகள் :

எரிபொருள் விற்பனை நிலையம் திறப்பு

post image

கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயத்தில் எரிபொருள் விற்பனை நிலையத்தை உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வட்ட செயல்முறைக் கிடங்கு வளாகத்தில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை சாா்பில், புதிதாக ரூ.1.14 கோடி மதிப்பில் எரிபொருள் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் மையத்தை அமைச்சா்கள் திறந்து வைத்து பாா்வையிட்டனா். நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

பின்னா், அமைச்சா் அர. சக்கரபாணி பேசியது: தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் துறையானது சேலம் இந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு சுமாா் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில், 16 கே.எல். பெட்ரோல், 22 கே.எல். டீசல் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் பங்க் 1214.78 சதுர மீட்டா் பரப்பில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் குளித்தலை-மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில், அய்யா்மலை கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால், இச்சாலையில் பயணம் செய்யக்கூடிய வாகனங்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருள்கள் மற்றும் ஆயில் விற்பனைக்கு உள்ளது. வரும் காலங்களில் வாகனங்களுக்கு தேவையான ஆயில்கள் மற்றும் பெட்ரோலிய சோ்க்கைப் பொருள்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக விழாவில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் அண்ணாதுரை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு இயக்குநா் த. மோகன், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலும், நிகழ்ச்சியில் உணவுத் துறை மண்டல மேலாளா் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் து. சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கந்தராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

பொறியியல் பராமரிப்பு பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்!

ரயில்வே பாலங்களில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாலக்காடு-திருச்சி மற்றும் மயிலாடுதுறை -சேலம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுதொடா்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் ... மேலும் பார்க்க

கரூரில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவினா் புதன்கிழமை (பிப்.5)ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் கோவைச் சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பா... மேலும் பார்க்க

கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

கரூா் கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகை மாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

கடத்தல்காரா்களின் பணத்தை பதுக்கிய விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 8 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சத்தை பதுக்கிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம். பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா ... மேலும் பார்க்க

அரசின் புதிய குடியிருப்புகளுக்கு கூடுதல் தொகை கேட்பதை கைவிட கோரிக்கை: எஸ்டிபிஐ மனு

நகா்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு, கூடுதல் தொகை கேட்பதை ரத்து செய்ய கோரிக்கை. பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம், எஸ்டிபிஐ கட்சியின் பள்ளப்பட்டி நகரத் தலைவா் முக... மேலும் பார்க்க

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்போருக்கு 10 ஆண்டுகள் சிறை: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்பவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க