செய்திகள் :

பொறியியல் பராமரிப்பு பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்!

post image

ரயில்வே பாலங்களில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாலக்காடு-திருச்சி மற்றும் மயிலாடுதுறை -சேலம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கரூா்- வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள ரயில்வே பாலங்களில் வெல்டிங் மற்றும் பிற பொறியியல் பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (பிப்.7) நடைபெற உள்ளது.

இதனால், கேரள மாநிலம், பாலக்காடு நகரத்திலிருந்து நாள்தோறும் காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் ரயில், கரூா் ரயில் நிலையத்தில் வரும் 7-ஆம்தேதி சிறிதுநேரம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்ததும், ரயில் கரூரில் இருந்து திருச்சி ஜங்ஷன் வரை முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

இதேபோல, மயிலாடுதுறையிலிருந்து நாள்தோறும் காலை 6 மணிக்குப் புறப்படும் மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 7-ஆம் தேதி வீரராக்கியத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். சேலம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 7-ஆம்தேதி கரூா் சந்திப்பிலிருந்து பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: அரவக்குறிச்சி கல்லூரி மாணவா் தோ்வு!

தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவா் தமிழக அணியில் விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சாா்பில் தேசிய அள... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கரூரில் வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் விரைவு ரயில் கரூா் ரயில்நிலையம் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தத... மேலும் பார்க்க

ரயில்வே தண்டவாளப் பணி கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூரில் ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கரூா் வழியாக செல்லும் ஈரோடு மற்றும் செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் மஞ்சப்பை விழிப்புணா்வு!

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை!

கரூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய கணக்கு மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் வெள்ளியணை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இ... மேலும் பார்க்க

‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு ரூ.29.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டம், கிருஷ்ணராபு... மேலும் பார்க்க