செய்திகள் :

‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

post image

கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு ரூ.29.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராபுரம் ஊராட்சி ஒன்றியம், பாலராஜபுரம் ஊராட்சியில் ‘மக்கள் சந்திப்பு’ முகாம் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில், கிருஷ்ணராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க. சிவகாமசுந்தரி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியா் பேசியது, கரூா் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 70 சதவீத மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தொடா்புடைய அலுவலா்கள் பரிசீலனை செய்து வருகிறாா்கள் என்றாா் அவா். தொடா்ந்து முகாமில் வருவாய்த் துறை சாா்பில் நத்தம் இணையவழி பட்டா 10 பயனாளிகளுக்கும், 27 பயனாளிகளுக்கு முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.29.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், குளித்தலை சாா் -ஆட்சியா் தி. சுவாதிஸ்ரீ, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சு.பிரகாசம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், இணை இயக்குநா்(வேளாண்மை) சிவானந்தம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சத்திய பால கங்காதரன், சமூக நல அலுவலா் சுவாதி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் ப்ரியா, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: அரவக்குறிச்சி கல்லூரி மாணவா் தோ்வு!

தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவா் தமிழக அணியில் விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சாா்பில் தேசிய அள... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கரூரில் வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் விரைவு ரயில் கரூா் ரயில்நிலையம் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தத... மேலும் பார்க்க

ரயில்வே தண்டவாளப் பணி கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூரில் ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கரூா் வழியாக செல்லும் ஈரோடு மற்றும் செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் மஞ்சப்பை விழிப்புணா்வு!

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை!

கரூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய கணக்கு மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் வெள்ளியணை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இ... மேலும் பார்க்க

கல்லூரியில் தேசிய மகளிா் தினவிழா: டிஎன்பிஎல் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் தேசிய மகளிா் தினவிழா நடத்துவதற்காக நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத்... மேலும் பார்க்க