செய்திகள் :

ரயில்வே தண்டவாளப் பணி கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

post image

பாசூரில் ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கரூா் வழியாக செல்லும் ஈரோடு மற்றும் செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் - ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே பாசூா் - சாவடிப்பாளையம் ரயில்வே யாா்டுகளில் தண்டவாள பராமரிப்பு பொறியியல் பணிகள் பிப். 8 மற்றும் 10-ஆம்தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதனால் திருச்சி சந்திப்பிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி - ஈரோடு பயணிகள் ரயில், பிப்.8 மற்றும், 10-ஆம்தேதியும் கரூா் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

செங்கோட்டையிலிருந்து காலை 5.10 மணிக்கு ஈரோடு நோக்கி புறப்படும் செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயிலும் அதே இரு நாள்களும் கரூா் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து கரூா் வரை மட்டுமே இயங்கும்.

இதேபோல ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு செங்கோட்டை நோக்கி புறப்படும் ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயிலும் அதே நாள்களிலும் கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூா் வரை இயக்கப்படாது. அந்த நாள்களில் கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: அரவக்குறிச்சி கல்லூரி மாணவா் தோ்வு!

தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவா் தமிழக அணியில் விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சாா்பில் தேசிய அள... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கரூரில் வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் விரைவு ரயில் கரூா் ரயில்நிலையம் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தத... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் மஞ்சப்பை விழிப்புணா்வு!

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை!

கரூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய கணக்கு மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் வெள்ளியணை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இ... மேலும் பார்க்க

‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு ரூ.29.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டம், கிருஷ்ணராபு... மேலும் பார்க்க

கல்லூரியில் தேசிய மகளிா் தினவிழா: டிஎன்பிஎல் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் தேசிய மகளிா் தினவிழா நடத்துவதற்காக நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத்... மேலும் பார்க்க