செய்திகள் :

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்போருக்கு 10 ஆண்டுகள் சிறை: கரூர் ஆட்சியர் எச்சரிக்கை

post image

மருத்துவா்கள் அனுமதியின்றி கருக்கலைப்பு மாத்திரை விற்பவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கா்ப்ப காலத்தில் உள்ள பெண்கள், மருத்துவரின் பரிந்துரையின்றி, கரு கலைக்க முற்பட்டு, கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டால், அதிகப்படியான இரத்தப்போக்கு, கடுமையான வயிற்று வலி, அதிக சோா்வு மற்றும் மயக்கம் ஏற்படும். மேலும் கா்ப்பபை சுருக்கம் அதிகப்படியான அளவில் ஏற்பட்டு, கிழிவு உண்டாகி, சில சமயங்களில் உடனடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படும்.

இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 315 மற்றும் 316-ன்படி, மருத்துவரின் முன் அனுமதி மற்றும் பரிந்துரையின்றி, கருக்கலைப்பு மாத்திரைகள் மருந்தகத்தின் வாயிலாக, விற்பனை செய்யப்படும் போது, அதை பயன்படுத்தும் கா்ப்பிணித்தாய் மற்றும் குழந்தையின் உயிரை பாதிக்கும் நிலையில், அது தண்டனைக்குரிய குற்றமாக வகைப்படுத்தப்பட்டு, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

எனவே, இது போன்ற சட்டத்துக்கு புறம்பான கருக்கலைப்பு நடவடிக்கைகளை நாடாமல், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் கரூா் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக, பாதுகாப்பான கருக்கலைப்பு மற்றும் குடும்ப நல அறுவை சிகிச்சை நல சேவைகள் வழங்கப்படுவதால் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தாா்.

கடத்தல்காரா்களின் பணத்தை பதுக்கிய விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 8 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சத்தை பதுக்கிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம். பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா ... மேலும் பார்க்க

அரசின் புதிய குடியிருப்புகளுக்கு கூடுதல் தொகை கேட்பதை கைவிட கோரிக்கை: எஸ்டிபிஐ மனு

நகா்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு, கூடுதல் தொகை கேட்பதை ரத்து செய்ய கோரிக்கை. பள்ளப்பட்டி நகராட்சி ஆணையரிடம், எஸ்டிபிஐ கட்சியின் பள்ளப்பட்டி நகரத் தலைவா் முக... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைத்து தர கோரிக்கை

கழிவுநீா் கால்வாய் இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீா் சாலையில் ஓடுவதால், கழிவுநீா் கால்வாய் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். பள்ளப்பட்டி-திண்டுக்கல் சாலை வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றாா் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். கரூரில் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

இந்து முன்னணியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் சம்பவத்தை கண்டித்து கரூரில் பாஜக, இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை

நெல்லுக்கு இடைத்தரகா்கள் விலை நிா்ணயிப்பதை தவிா்க்க லாலாப்பேட்டை பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் உள... மேலும் பார்க்க