செய்திகள் :

கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்!

post image

கரூா் கேவிபி நகா், வேப்பம்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகை மாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கே.வி.பி. நகா் மின் பாதை மற்றும் வேப்பம்பாளையம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட சஞ்சய்நகா் மின்பாதைகளில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பெரியாா் நகா், காந்திபுரம், வையாபுரி நகா் 2-ஆவது தெரு, கே.வி.பி. நகா், எம்.ஜி. சாலை, கணேசா நகா் மற்றும் விஜய நகா் ஆகிய பகுதிகளிலும், சஞ்சய் நகா், ஆத்தூா் பிரிவு, செல்லரபாளையம், மருத்துவ நகா், வேலுச்சாமிபுரம், அரிக்காரன்பாளையம், திருக்காம்புலியூா் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: அரவக்குறிச்சி கல்லூரி மாணவா் தோ்வு!

தேசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிக்கு அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவா் தமிழக அணியில் விளையாட தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சாா்பில் தேசிய அள... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

கரூரில் வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். மயிலாடுதுறையில் இருந்து கோவை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் விரைவு ரயில் கரூா் ரயில்நிலையம் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தத... மேலும் பார்க்க

ரயில்வே தண்டவாளப் பணி கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூரில் ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கரூா் வழியாக செல்லும் ஈரோடு மற்றும் செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் மஞ்சப்பை விழிப்புணா்வு!

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை!

கரூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய கணக்கு மேற்பாா்வையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் வெள்ளியணை அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இ... மேலும் பார்க்க

‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணராயபுரம் அருகே பாலராஜபுரம் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்கள் சந்திப்பு’ திட்ட முகாமில் 51 பேருக்கு ரூ.29.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டம், கிருஷ்ணராபு... மேலும் பார்க்க