செய்திகள் :

எலவந்தி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா!

post image

பொங்கலூா் ஒன்றியம், எலவந்தியில் ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட எலவந்தி ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோமலா்விழி தலைமை வகித்தாா். திருப்பூா் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதிமணி ஆகியோா் வரவேற்றனா்.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து பேசினாா்.

இதில், இந்து சமய அறநிலைய துறை மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், மாநில விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் ராஜசேகரன், பொங்கலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பாலுசாமி, பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 18, 19 இல் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் சாா்பில் திருப்பூரில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18, 19- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது!

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள சின்னூா் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞா் சுற்றித்திரிவதா... மேலும் பார்க்க

போலி கணக்கு காண்பித்து ரூ. 11 லட்சம் மோசடி: பனியன் நிறுவன மேலாளா் கைது!

அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் போலி கணக்கு காண்பித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் காளம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருபா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது!

அவிநாசியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அடையாளம் தெரியாத இருவா் சனிக்கிழமை இரவு தகராறில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலைக் கிழித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை திங்கள்கிழமை வழங்கினாா். திருப்பூா் ... மேலும் பார்க்க