செய்திகள் :

எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது கடினம்: சஜ்ஜன் ஜிண்டால்

post image

இந்தியச் சந்தையில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம் என்று தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா கார்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக இந்தியாவில் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியச் சந்தையில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம் என்று தொழிலதிபரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.

எர்ன்ஸ்ட் அன்ட் யங் தொழில்முனைவோர் விருதுகளில் பங்கேற்ற சஜ்ஜன் ஜிண்டால் பேசியதாவது, ``டெஸ்லா நிறுவனர் அறிவாளிதான்; அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக, அவர் இந்தியச் சந்தையில் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது. அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு, இந்தியாவின் களச் சூழல் மற்றும் இந்தியாவின் தேவை குறித்து தெரியாது.

இதையும் படிக்க:மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்! விமான சேவைகள் முடக்கம்!

நாங்கள் இங்கேயே இருக்கிறோம். மஹிந்திரா, டாடா செய்யக் கூடியதை எலான் மஸ்க்கால் செய்ய முடியாது. அது சாத்தியமுமில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிழலிருக்கும் அவரால் நினைத்ததை செய்ய முடியும். ஸ்பேஸ்எக்ஸ் மூலம் ராக்கெட்கூட அவர் செலுத்தலாம். ஆனால், இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல’’ என்று தெரிவித்தார்.

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க

ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.அவதூறு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம் சென்ற ராகுல் காந்தி, தனது ஷூவைத் தைப்ப... மேலும் பார்க்க

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில... மேலும் பார்க்க

பிகார் அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்!

பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,389 ஆசிரியர்களுக்கு, முதல்வர் நிதீஷ் குமார் இன்று நியமனக் கட... மேலும் பார்க்க