செய்திகள் :

எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா காலமானார்!

post image

பிரபல எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா உடல் நலக்குறைவால் காலமானார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளரான எஸ். எல். பைரப்பா இந்தியளவில் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆவார். இவர் எழுதிய பருவம், ஒரு குடும்பம் சிதைகிறது, வம்ச விருட்சம் நாவல்கள் இந்திய இலக்கியத்தில் பாய்ச்சலாகவே கருதப்படுகின்றன.

இவை அனைத்தும் கன்னடத்திலிருந்து பிறமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பரபலவான கவனத்தைப் பெற்றவை.

பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ மற்றும் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது உள்பட பல விருதுகளை வென்ற பைரப்பாவின் படைப்புலகம் தத்துவம், வரலாறு, சமூக அரசியல், மத சிந்தனை ஆகியவற்றை மையமாகக் கொண்டவை என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழ் இலக்கியச் சூழலிலும் இவர் எழுதிய ஒரு குடும்பம் சிதைகிறது முக்கியமாக ஆக்கமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 94 வயதான எஸ். எல். பைரப்பா வயது மூப்பால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு கன்னட எழுத்தாளர்கள், வாசகர்கள் உள்பட பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

sahitya akademy winner writer S. L. Bhyrappa died today

உலகை நானே காப்பாற்றனுமா... டிரம்ப்பின் அடுத்த புலம்பல்!

நியூயார்க்: நான் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற ஏழு மாதங்களில் ஏழு போா்களை நிறுத்தியுள்ளதாக தொடர்ந்து புலம்பி வரும் டொனால்ட் டிரம்ப், உலக பிரச்னைகளை தீர்க்கும் என்னை பாராட்டி ஐ.நா. சபையிடமிருந்த... மேலும் பார்க்க

ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12 இல் வெளியாகும்: நடிகர் ரஜினிகாந்த் தகல்

ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 2023-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர். இந்த படத்தை... மேலும் பார்க்க

மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை

மன்னர் சரபோஜியின் 248 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தஞ்சாவூரை சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என பல மன்னர்கள்... மேலும் பார்க்க

இபிஎஸ்ஸுக்கு மக்கள் மீது கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? : கே.என். நேரு

திருநெல்வேலி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மக்கள் மீதான கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலியில் பசுமைத் தமிழ்... மேலும் பார்க்க

கலைமாமணி விருது பெறும் சதிராட்டக் கலைஞர் முத்துகண்ணம்மாள்!

விராலிமலை: விராலிமலை சேர்ந்த சதிர் கலைஞரான பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள் தமிழக அரசின் கலைமாமணி (பால சரசுவதி) விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விராலிமலையைச் சேர்ந்த 93 வயதான முத்து கண்ணம்மாள் இசை வேளாள... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 10,849 கனஅடியில் இருந்து வினாடிக்கு 9, 425 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வி... மேலும் பார்க்க