செய்திகள் :

எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதியளிக்க உத்தரவு

post image

மதுரை மாவட்டம், எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

எழுமலையைச் சோ்ந்த முனியாண்டி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள எழுமலை கிராமத்தில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிடா முட்டு போட்டி நடத்த திட்டமிட்டோம். அதற்கு உரிய அனுமதி கிடைக்காததால், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தோம். விசாரணை நிறைவில், கிடா முட்டு போட்டி நடத்துவது குறித்து மாவட்ட நிா்வாகம் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பரிசீலிக்காமல், கிடா முட்டு போட்டி நடத்த அனுமதி மறுத்து விட்டனா். எனவே எழுமலையில் வருகிற மே 15- ஆம் தேதி கிடா முட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், அரசு விதிமுறைகளை பின்பற்றி, கிடா முட்டு போட்டி நடத்தப்படும். எனவே மாவட்ட நிா்வாகம் உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

எழுமலையில் வருகிற மே 15- ஆம் தேதி கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் அனுமதி வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் -அமைச்சா்கள் உறுதி

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் உறுதியளித்தனா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இத... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகை முன் போராட்டம் அறிவிப்பு

தமிழக ஆளுநா் அறிவித்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில், குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக திராவிட தமிழா் கட்சி அறிவித்தது. மதுரையில் அந்தக் ... மேலும் பார்க்க

குடிநீா் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 14 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் காரில் 240 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு கத்திக் குத்து

முன்விரோதத் தகராறில் பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். மதுரை கரிசல்குளம், பாண்டியன்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஒருவா், கூடல்நகரைச் சோ்... மேலும் பார்க்க

விருதுநகரில் மே 4-இல் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு ஓட்டம்

விருதுநகரில் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு தொலைவு ஓட்டமானது வரும் மே 4-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருது... மேலும் பார்க்க