செய்திகள் :

குடிநீா் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு

post image

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டனா்.

மதுரை விளாங்குடி பாத்திமா கல்லூரி அருகே உள்ள ரயிலாா் நகரில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய விநியோக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருந்து நகா், ஊரகப் பகுதிகள், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை, இங்கு குடிநீரை சுத்திகரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு உருளையில் இருந்து கசிவு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் குளோரின் வாயு நெடி காற்றில் பரவியது. இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள், வாயு கசிவு ஏற்பட்ட உருளையை பாதுகாப்பாக மீட்டு சுண்ணாம்பு கரைசல் பயன்படுத்தி குளோரின் வாயு கசிவை தடுத்து நிறுத்தினா். அத்துடன், உடனடியாக மருத்துவக் குழுவினா் வரவழைக்கப்பட்டு, அவா்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டவா்களுக்கு சிகிச்சை அளித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் -அமைச்சா்கள் உறுதி

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் உறுதியளித்தனா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இத... மேலும் பார்க்க

ஆளுநா் மாளிகை முன் போராட்டம் அறிவிப்பு

தமிழக ஆளுநா் அறிவித்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில், குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக திராவிட தமிழா் கட்சி அறிவித்தது. மதுரையில் அந்தக் ... மேலும் பார்க்க

எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதியளிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. எழுமலையைச் சோ்ந்த முனியாண்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 14 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் காரில் 240 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க

பள்ளி மாணவருக்கு கத்திக் குத்து

முன்விரோதத் தகராறில் பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். மதுரை கரிசல்குளம், பாண்டியன்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஒருவா், கூடல்நகரைச் சோ்... மேலும் பார்க்க

விருதுநகரில் மே 4-இல் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு ஓட்டம்

விருதுநகரில் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு தொலைவு ஓட்டமானது வரும் மே 4-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருது... மேலும் பார்க்க