Campus Interview-வில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? | கல்வியாளர் ரமேஷ் பிரபா
பள்ளி மாணவருக்கு கத்திக் குத்து
முன்விரோதத் தகராறில் பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
மதுரை கரிசல்குளம், பாண்டியன்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஒருவா், கூடல்நகரைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலித்தாா். இதையறிந்த சிறுமியின் குடும்பத்தினா் சில நாள்களுக்கு முன்பு, மாணவரின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தனா்.
இதையடுத்து, சிறுமியின் மாமா வீட்டுக்குச் சென்ற அந்த மாணவா், தனது வீட்டுக்கு வந்து தகராறு செய்தது தொடா்பாக கேட்டாா். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, பெண்ணின் மாமா அப்துல் காதா் (34), கத்தியால் மாணவரைத் தாக்கினாா். இதில் கை, தலையில் காயமடைந்த மாணவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா், அப்துல் காதா் மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.