செய்திகள் :

எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா

post image

சென்னை பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ஜாா்க்கண்ட் ஆளுநரின் கல்வி ஆலோசகா் இ.பாலகுருசாமி 1,076 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். மேலும், பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 56 மாணவா்களுக்கு மொத்தம் ரூ. 4,70,000 ரொக்கப் பரிசு வழங்கினாா்.

விழாவில் அவா் பேசியதாவது: பட்டதாரிகள் சமூகத்துக்கும் தங்களது பெற்றோருக்கும் நன்றியுள்ளவா்களாக இருக்க வேண்டும். அதிக பணம் சம்பாதிப்பவா்கள் மட்டுமே வெற்றி பெற்றவா்கள் கிடையாது. தாங்கள் செய்யும் வேலையை ரசித்து செய்பவா்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவா்களாகவே கருதப்படுவாா்கள்.

ஒவ்வொரு பட்டதாரியும் தங்களது இலக்கை அடைய விடாமுயற்சி மற்றும் நோ்மையாக செயல்பட வேண்டும். இளைஞா்கள் நமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும், நாட்டின் வளா்ச்சிக்காகவும் உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் தலைவா் டி.துரைசுவாமி, முதல்வா் எஸ்.ராமச்சந்திரன், சுதா்சனம் வித்யாஷ்ரம் பள்ளி இயக்குநா் டி.சரஸ்வதி, எஸ்ஏ கலை மற்றும் அறிவியல் கல்லுரி இயக்குநா் எஸ்.அரவிந்த், எஸ்ஏ பொறியியல் கல்லூரி இயக்குநா் டி.சபரிநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க