செய்திகள் :

எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, மணிகண்டனுக்கு கலைமாமணி விருது! திரைத் துறை பட்டியல்!

post image

நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது.

தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படவுள்ளது.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில், அக்டோபர் மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவிக்கவுள்ளார்.

பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருது பெறும் திரைக் கலைஞர்கள் பட்டியல்

2021

எஸ். ஜே. சூர்யா

சாய் பல்லவி

லிங்குசாமி

ஜே. கே. (எ) எம். ஜெயகுமார் - திரைப்பட அரங்க அமைப்பாளர்

சூப்பர் சுப்பராயன் - திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்

2022

விக்ரம் பிரபு

ஜெயா வி. சி. குகநாதன்

விவேகா - பாடலாசிரியர்

டைமண்ட் பாபு - திரைப்பட செய்தித் தொடர்பாளர்

டி. லட்சுமிகாந்தன் - திரைப்பட புகைப்படக் கலைஞர்

2023

கே. மணிகண்டன்

எம். ஜார்ஜ் மரியான்

அனிருத்

ஸ்வேதா மோகன்

சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார்

நிகில் முருகன் - திரைப்பட செய்தித் தொடர்பாளர்

S.J. Surya, Sai Pallavi, Manikandan to receive Kalaimamani Award

இதையும் படிக்க : 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: முழு விவரம்!

படப்பிடிப்பில் பலமுறை மரணத்தைச் சந்தித்தேன்: ரிஷப் ஷெட்டி

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள ந... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 வெளியீட்டுத் தேதியைச் சொன்ன ரஜினி!

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து ரஜினி பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் அவர் நடித்துவரும் ஜெயிலர்... மேலும் பார்க்க

பிரபல சின்ன திரை இயக்குநர் காலமானார்!

பிரபல சின்ன திரை இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப். 24) காலமானார்.இயக்குநர் நாராயணமூர்த்திக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மருத்... மேலும் பார்க்க

இனி நேஷனல் க்ரஷ் ருக்மணிதான்!

நடிகை ருக்மணி வசந்துக்கு இந்தியளவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந... மேலும் பார்க்க

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான உத்தரவுக்கு தடை!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் காப்புரிமைத் தொகையாக ரூ. 2 கோடி வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளதால், இடைக... மேலும் பார்க்க

உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றம்!

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே அமைந்துள்ள உப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ள... மேலும் பார்க்க