செய்திகள் :

சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்!

post image

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில், கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில அரசின் நக்சல்களுக்கான மறுவாழ்வு திட்டங்களின் கீழ், தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (செப். 24) தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கங்களில் செயல்பட்டு வந்த 21 பெண்கள் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சத்தீஸ்கர் காவல் துறையினர் கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடி வந்த 30 நக்சல்களும், இந்தக் குழுவுடன் இணைந்து சரணடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், அதிகப்படியாக 2011 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு, ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பாமன் மத்காம் என்பவர் சரணடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள நக்சல்களுக்கு மாநில அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு, அவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு

In Chhattisgarh's Dantewada district, 71 Naxals, including 30 wanted with a collective reward of Rs 64 lakh, have surrendered to security forces.

கொல்கத்தா இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்: ராகுல்

மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கவலை தெரிவித்ததோடு, இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநில, மத்திய அரசை அவர் வலிய... மேலும் பார்க்க

ஏழை மாணவிகளே குறி: பாலியல் புகாரில் சிக்கிய சாமியார்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

ஏழை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின்கீழ் பிரபல சாமியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தில்லியில் செயல்படும் ஒரு மேலாண்மை படிப்புசார் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகளிடம் அந்நிறுவனத... மேலும் பார்க்க

திருட்டை பிடித்த பிறகுதான் பூட்டுப்போட ஞாபகம் வந்ததா? ராகுல் கேள்வி

திருட்டை பிடித்த பிறகுதான் பூட்டுப்போட ஞாபகம் வந்ததா என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கு ஆதார் எ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு

புது தில்லி: இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் 11.52 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி ... மேலும் பார்க்க

வாக்காளர் பெயரை நீக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் கட்டாயம்!

வாக்காளர் அட்டையில் பெயரை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை இந்திய தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.வாக்காளர்களுக்கு தெரியாமல் பெயர் நீக்கப்படுவதாக மக்களவை எத... மேலும் பார்க்க

லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு!

லடாக்கில் உள்ள பாஜக அலுவலகத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது... மேலும் பார்க்க