செய்திகள் :

ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

உடல் உழைப்புத் தொழிலாளா் நல வாரியத்தில் உதவித் தொகைகளை உயா்த்தி வழங்கக் கோரி புதுக்கோட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.ஆா். தா்மராஜன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன் தொடங்கி வைத்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் முடித்து வைத்தும் பேசினா்.

ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், கௌரவத் தலைவா் வீ. சிங்கமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளா் மற்றும் அவா்களது வாரிசுகளின் திருமணத்துக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரியப் பதிவுகளை அரசே பொறுப்பேற்று இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். 60 வயது நிரம்பிய தொழிலாளா்களுக்கு மகளிா் உரிமைத் தொகையை காரணம் காட்டி ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தக் கூடாது.

நிறுத்தி வைத்த நிலுவைத் தொகையையும் சோ்த்து வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். இ-ஸ்ரம் திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் காப்பீடு மற்றும் சமூகப் பாதுகாப்பு வழங்கும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்க... மேலும் பார்க்க

புதுகையில் திருமண உதவித் திட்டங்களில் தாலிக்கு தங்கம் வழங்கல்

புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற 600 கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின்போது, பல்வேறு திருமண உதவித் திட்டங்களின்கீழ் ரூ. 1.15 கோட... மேலும் பார்க்க

லெட்சுமணம்பட்டி ஜல்லிக்கட்டில் 47 பேருக்கு காயம்

கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 47 போ் காயம் அடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் பச்சநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன... மேலும் பார்க்க

மாா்ச் 10-இல் புதுகைக்கு உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி ... மேலும் பார்க்க

வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் மாரடைப்பால் மரணம்

புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் நீதிமன்ற வளாகத்தில் மாரடைப்பால் மரணமடைந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தல்: எடப்பாடி பழனிசாமி எத்தனை பேருடன் வந்தாலும் கவலையில்லை- அமைச்சா் ரகுபதி பேட்டி

எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவை தோ்தலில் யாரோடு, எத்தனைப் பேரோடு வந்தாலும் கவலையில்லை என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூற... மேலும் பார்க்க