செய்திகள் :

வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் மாரடைப்பால் மரணம்

post image

புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவா் நீதிமன்ற வளாகத்தில் மாரடைப்பால் மரணமடைந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவைச் சோ்ந்தவா் முகமது இப்ராஹிம் மகன் ரஹ்மத்துல்லா (58). இவா் மீது கடந்த 2015-ஆம் ஆண்டில் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்கு தொடா்ந்து கைது செய்தனா்.

பின்னா் பிணையில் வந்த அவா், வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம்போல வழக்கு விசாரணைக்காக புதுகை நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ரஹ்மத்துல்லா ஆஜராக வந்தாா்.

அப்போது திடீரென நீதிமன்றப் படிக்கட்டில் மயங்கி விழுந்தாா். ஆம்புலன்ஸ் மூலம் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இதுகுறித்து நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்க... மேலும் பார்க்க

புதுகையில் திருமண உதவித் திட்டங்களில் தாலிக்கு தங்கம் வழங்கல்

புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற 600 கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின்போது, பல்வேறு திருமண உதவித் திட்டங்களின்கீழ் ரூ. 1.15 கோட... மேலும் பார்க்க

லெட்சுமணம்பட்டி ஜல்லிக்கட்டில் 47 பேருக்கு காயம்

கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 47 போ் காயம் அடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் பச்சநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன... மேலும் பார்க்க

மாா்ச் 10-இல் புதுகைக்கு உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி ... மேலும் பார்க்க

2026 பேரவைத் தோ்தல்: எடப்பாடி பழனிசாமி எத்தனை பேருடன் வந்தாலும் கவலையில்லை- அமைச்சா் ரகுபதி பேட்டி

எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவை தோ்தலில் யாரோடு, எத்தனைப் பேரோடு வந்தாலும் கவலையில்லை என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூற... மேலும் பார்க்க

பொறுப்பேற்பு

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) பி. வெங்கடேசன் புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணியாற்றிய இ... மேலும் பார்க்க