செய்திகள் :

ஏக்நாத் ஷிண்டே வருகையின் போது டிரோன் பறக்கவிட்ட 2 பேர் கைது

post image

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வருகையின்போது ரோன் பறக்கவிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், ஹிவாலியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகை தந்திருந்தார். அவர் வருகையின் போது வானில் டிரோன் ஒன்று பறந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 2 பேரைக் கைது செய்துள்ளனர்.

கூகுள் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை? மெக்சிகோ அதிபர் எச்சரிக்கை!

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அனுமதியின்றி டிரோன் பறக்கவிட்ட ஒரு நபரை நாங்கள் கைது செய்துள்ளோம். தொடர்ந்து இந்த விவகாரத்தில் புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்.

இந்த சம்பவம் சந்தேகத்திற்குரியதாகத் தெரியவில்லை.

இருப்பினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என்றார். முன்னதாக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது பாதுகாப்பு கருதி வானில் டிரோன் பறக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவளம் கடலில் அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலி

கோவளம் கடலில் 75 வயது அமெரிக்க பெண் நீரில் மூழ்கி பலியானதாக சனிக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.விழிஞ்சம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நண்பர்களுடன் விடுமுறைக்கு வந்திருந்த பெண், க... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு கிட... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் காசி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தியுடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு

தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்ப... மேலும் பார்க்க

கும்பமேளாவில் நீராடிய மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சா் சிராக் பஸ்வான் தனது குடும்பத்தினருடன் நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி... மேலும் பார்க்க