செய்திகள் :

`ஏங்க, என்மேல இருக்க வழக்கால தான் கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கிக்கிட்டிருக்கேன்’- வைரல் இளைஞர் தங்கபாண்டி

post image

அந்த மாவட்டத்துக்காரர்களால்கூட பெரிதாக அறியப்படாத ஊர். ஆனால், அந்த இளைஞரின் வீடியோவால் ‘கூமாபட்டி’ என்கிற அச்சிறிய கிராமம், வேர்ல்டு லெவல் ஃபேமஸ் ஆகி இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

“ஏஏஏஏஏஏஏஏங்க.... தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு கூமாபட்டி மாதிரி எங்கேயுமே கிடையாது. ஏன்... ஒலகத்திலேயே கிடையாது. இந்தமாதிரி ஊரு எங்கயாச்சும் உண்டா? ஏங்க... தனி ஐலாண்டுங்க. அங்கப்பாருங்க, காஷ்மீர் மாதிரி இருக்கா? இங்கிட்டு பாருங்க கர்நாடகா மாதிரி இருக்கா? அங்கிட்டு பாருங்க... அதுதாங்க கூமாபட்டி.' என விஜயகாந்த் ஸ்டைலில் சொல்லும் தங்கபாண்யை சந்தித்து 'இப்படி கத்தி கத்தியே ஒருவழியா ஊரை ஃபேமஸ் ஆகிட்டீங்களே... எப்படி இருக்கு?" என்றோம்.

“எங்க ஊரு ‘கூமாபட்டி’ உலக அளவில ஃபேமஸ் ஆனதுல ரொம்பவே சந்தோஷம். ‘ஏங்க... ஏங்க’ன்னு சொல்லி வீடியோ எடுக்கும்போது, நிறைய தடவை தொண்டை வலியே வந்திருக்கு. ஒன்றரை வருடங்களா தொண்டை தண்ணி வற்றிப்போக, தண்ணியில குளிச்சு குளிச்சு கத்தினதுக்கு, இப்போதான் பலன் கிடைச்சிருக்கு” என உற்சாக மகிழ்ச்சியில் பேசுகிறார், 'கூமாபட்டி' வைரல் இளைஞர் தங்கபாண்டி.

தங்கபாண்டி

ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் டூர் போறதுன்னா குற்றாலம்தான்..!

“என்னோட குடும்பம் ஏழ்மையான குடும்பம். பெற்றோருக்கு நான்கு பிள்ளைங்க. நான் மூத்தவன், எனக்கடுத்து இரண்டு தம்பிங்க, ஒரு தங்கச்சி. அப்பா செங்கல் சூளையிலும் கறிக்கடையிலும் வேலைபார்த்துதான் எங்களை படிக்க வெச்சார். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து டூர் போறதுன்னா குற்றாலம்தான் போவோம். என்கிட்ட காசு இருக்காது.

சாப்பாட்டு செலவை நீங்க பார்த்துக்கோங்கடான்னு சொன்னதுக்கு என்னை விட்டுட்டு போயிட்டானுங்க. அப்போதே, நம்ம ஊர்லேயே நீர்வீழ்ச்சி, அணை, ஆறு எல்லாமே இருக்கு. நாம, எதுக்கு அங்கப்போயி காசு செலவு பண்ணிக்கிட்டு போகணும்னு தோணுச்சு.

அதேமாதிரி, நான் கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்க இன்னொரு காரணமும் இருக்கு. அது, என்னன்னா? என்மேல இருக்கிற அந்த வழக்குதான். எனக்கு குடி, சிகரெட்ன்னு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. எங்க வீட்டுல எல்லாருமே நான் வெஜ் சாப்பிடுவாங்க. நான் சுத்த சைவம். இயற்கை நேசிப்பு ரொம்பவே அதிகம். பி.எட் படிச்சிருக்கேன். ஆசிரியர் ஆகணும்ங்குற ஆசையால், மாணவர்கள் மத்தியில ஒழுக்கமா இருக்கணும்னு முன்மாதிரியா செயல்படுவேன்.

வீட்டுல இருக்கிற ஆடு, மாடு கோழிங்களோடுதான் பழகிக்கிட்டிருப்பேன். விலங்குகள் நேசிப்பு, இயற்கை நேசிப்பு இரண்டும் இருக்கிறதால, எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டேன். ஆனா, செய்யாத ஒரு குற்றத்துக்காக கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சு, மூன்று ஆண்டுகளா மன உளைச்சலில் இருக்கேன்.

தங்கபாண்டி

தப்பு செஞ்சிருந்தா பரவாயில்ல..!

புத்தாண்டுன்னா பசங்க ஜாலியா கேக் வெட்டி கொண்டாடுவாங்க. அப்படி, என் தம்பி நியூ இயர் கொண்டாடும்போது பக்கத்து வீட்டுக்காரங்களுக்கும் என் தம்பிக்கும் கைக்கலப்பு ஆகிடுச்சு. அந்த ஸ்பாட்டிலேயே நான் கிடையாது. நான், என் தங்கச்சி எல்லாம் தூங்கிக்கிட்டிருந்தோம். பார்த்தா எங்க பேரையும் சேர்த்து பக்கத்து வீட்டுக்காரங்க புகார் கொடுத்துட்டாங்க. என் தங்கச்சி பி.ஏ. ஆங்கிலம் படிச்சிக்கிட்டிருக்கு. அதுவும் இப்போ எங்கக்கூட கோர்ட்டுக்கு அலைஞ்சுக்கிட்டிருக்கு.

தப்பு செஞ்சிருந்தா பரவாயில்ல. செய்யாத தப்புக்கு கோர்ட்டுக்கு போறது எவ்ளோ மன உளைச்சலா இருக்கும்? இதுக்கே, நான் போலீஸ் ஆகணும்னு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தீவிரமா படிச்சிக்கிட்டிருந்தேன். ஃபிசிகல் டெஸ்ட் எல்லாம் அட்டெண்ட் பண்ணியிருந்தேன். அப்படியிருக்கும்போது, நான் எப்படி சண்டைக்கு போடுவேன்? என்மேல வழக்கு போட்டதால டீச்சரும் ஆக முடியல. போலீஸும்ஆக முடியல. வீட்டுக்கு நான் தான் மூத்த பையன். எங்கப்பா கறிக்கடையில நின்னு நின்னு காலில் நீர்க்கட்டியே வந்துடுச்சு. மூத்தப்பிள்ளையான என்மேல அவருக்கு, எவ்ளோ கனவுகள் இருக்கும்? ஆசிரியர் பயிற்சி படிப்பை எல்லாம் படிக்க வெச்சார். இப்போ, இந்த வழக்கால என் வாழ்க்கையே கேள்வி ஆகிடுச்சு. என் வேலை, எதிர்காலம் எல்லாமே போயி விரக்தியிலதான், இன்ஸ்ட்டாவுல ரீல்ஸ் போட ஆரம்பிச்சேன்.

'கூமாபட்டி' தங்கபாண்டி

நொங்கே நாங்கதான்... நாங்கதான் நொங்கே!

ஆரம்பத்துல எங்க ஊரோட விவசாயம், நுங்கு சாப்பிடுறது பற்றியெல்லாம் வீடியோ போட்டுக்கிட்டிருந்தேன். அதுல, 'ஏங்க... நொங்கே நாங்கதான்... நாங்கதான் நொங்கே..'ன்னு நான் சொன்னது வைரல் ஆகிடுச்சு. அதனைத் தொடர்ந்துதான், எங்க ஊரோட இயற்கை எழில் கொஞ்சும் கூமாபட்டியைச் சுற்றிப்பார்க்கிறதுக்கு இவ்ளோ அழகான இடங்கள் இருக்குன்னு போட ஆரம்பிச்சேன்.

கூமாபட்டி

மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரம்தான் கூமாபட்டி. மலைகளைச் சுற்றி ஐந்தாறுகள் ஓடுது. பத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் இருக்கு. எங்களுக்கு தெரிஞ்சே ஆறு நீர் வீழ்ச்சி இருக்கு. ஆனா, மொத்தம் 18 நீர்வீழ்ச்சி இருக்கிறதா சொல்றாங்க. நிறைய கிணறுகள் இருக்கு. மலைகளிலிருந்தே இயற்கையாகவே தண்ணீர் வர்றதால, நான் வீடியோவுல சொல்றமாதிரி சர்பத் தண்ணீர்ன்னுதான் சொல்வேன். அவ்ளோ சுத்தமான, மூலிகை நிறைந்த இனிமையான நீர். அப்படியே, பளிங்கு மாதிரி இருக்கும்.

பி.எட் ஆசிரியர் பயிற்சி படிச்சிருந்தும் வழக்கு இருப்பதால நான் எந்த வேலைக்கும் போகமுடியல. அதனால, எங்க வீட்டுல இருக்கிற 10 எருமை மாடுகள், 15 ஆடுகளை மேய்க்கிறதுக்கு தினமும் வெளியில போவேன். எங்க ஊர்லேர்ந்து கூமாபட்டி அணைக்கு 8 கிலோ மீட்டர் தூரம். வாரத்துல மூன்று நாட்கள் ஆடு மாடு மேய்ப்பேன். மீதி மூன்று நாட்கள் வீட்டுல உள்ளவங்கள பார்க்க சொல்லிட்டு, பெட்ரோலை போட்டுக்கிட்டு கூமாபட்டிக்கு கிளம்பிடுவேன். அங்கப்போயி, அந்த தண்ணியில இறங்கி குளிக்கிற சுகம் இருக்கே? அப்படியே மீன்கள் எல்லாம் உரசிக்கிட்டு போகும். சாரல் அடிக்கும். அப்படி ஒரு அற்புதமான பேரனுபவமா இருக்கும்.

koomapatti

தண்ணீரோடு அதிகமாக பேசுவேன்!

அந்த சந்தோஷம் வேற எதிலேயுமே கிடைக்காது. அதுமட்டுமில்லாம, நான் இயற்கையோடு அதிகமா பேசுவேன். தண்ணீரோடு அதிகமாக பேசுவேன். என் கஷ்டங்களை எல்லாம் தண்ணிக்கிட்ட சொல்லுவேன். அது, என்னோட வலிகளை எல்லாம் புரிஞ்சுக்கிதுன்னு உணர்றேன். அதனாலதான், கூமாபட்டியில் தண்ணீரில் இருக்கும் வீடியோக்களை அதிகமா போட ஆரம்பிச்சேன்.

அதுமட்டுமில்லாமல், இங்க இருக்கிற பசங்களுக்கு நீச்சல் சொல்லி கொடுக்கிறேன். ஆழ்நீச்சல், அடிநீச்சல்னு பலவிதமான நீச்சல்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். என்னோட வீடியோ பார்த்துட்டு என்னோட ஊரு பெரிய சுற்றுலா தலமா மாறி வருமானத்தை கொடுக்கணும்ங்குறதுதான் ஆசை.

என் கிராம மக்களோட பொருளாதார தேவைகள் பூர்த்தி அடையணும் என்பதுதான் விருப்பம்” என்கிறவரிடம், "அதெல்லாம் சரி, நீங்க வீடியோவுல லவ் ஃபெயிலியரா? கணவன் மனைவி பிரச்சனையா? கூமாப்பட்டிக்கு வந்து தண்ணியில குளிச்சா சரியாகிடும்னு சொல்றீங்க. எந்த அடிப்படையில இப்படி சொல்றீங்க? மூட நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டபோது,

கூமாபட்டிக்கு வாங்க. எல்லாம் மாறிடும்!

“லவ் ஃபெயிலியர்ன்னு கஷ்டப்பட்டுக்கிட்டிருப்பீங்க. ஐஸ் மாதிரி இருக்கிற கூமாபட்டியில இருக்கிற தண்ணியில குளிச்சுட்டு பச்சை பசேல்னு இருக்கிற செடி, கொடிகளை பார்த்துட்டு போனாலே உங்க மைண்ட் மாறிடும். இப்பவும் சொல்றேன். உங்க வீட்டுல என்ன கஷ்டம் இருந்தாலும் கூமாபட்டிக்கு வாங்க. எல்லாம் மாறிடும். மற்றபடி நீச்சல் தெரிஞ்சிருக்கணும். சில ஆழமான பகுதிகளும் இருக்கு. அரசு சார்பில் இங்கு ட்ரக்கிங் எல்லாம் உண்டு. நீர் வீழ்ச்சிக்கு எல்லாமே போயி பார்க்கலாம். ஆனா, யானை, கரடி, காட்டுமாடு போன்ற விலங்குகள் நடமாட்டம் இருக்கிறதால, பிளவுக்கல் அணையை நான்கு வருடங்களுக்கு முன் அரசாங்கம் மூடிடுச்சு. ஒருநாள், காட்டுல நான் போயிக்கிட்டிருக்கும்போது ராஜநாகத்தை பார்த்தேன். நம்ப ஊர்ல ராஜநாகம்லாம் இருக்காதுன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இரண்டு அடி உயரத்துக்கு அது சீறிப்பாய்ஞ்சுக்கிட்டு நின்னதை இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு.

தங்கபாண்டி

நான் லவ் பன்ற பொண்ணுக்கு செம்ம ஹேப்பி!

பிரபாகரன் போர் பயிற்சியில் ஈடுபட்ட இடம்தான் கூமாபட்டி. அதற்கான சான்றுகளும் இருக்கு. 'பிரபாகரன் கட்டை'ன்னு ஒரு இடமே இருக்கு. அப்படிப்பட்ட, கூமாபட்டி இப்போ என் மூலமா ஃபேமஸ் ஆனதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஊர்க்காரங்க எல்லாம் அப்படி பாராட்டுறாங்க. குறிப்பா, நான் லவ் பன்ற பொண்ணுக்கு செம்ம ஹேப்பி. என் தங்கச்சி கல்யாணம், வழக்கு எல்லாம் முடிச்சுட்டு அவங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். மாவட்ட ஆட்சியரை சந்திச்சு, கூமாபட்டியை சுற்றுலா தலமாக்கணும்னு மனு கொடுக்கலாம்னு இருக்கேன்.

ஆரம்பத்துல எங்கப்பா அம்மா புரிஞ்சுக்கல. ஏற்கனவே, மூத்த பையனோட வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு வருத்தத்துல இருந்தாங்க. ரீல்ஸ் போடும்போது அட்வைஸ் பண்ணுவாங்க. ஆனா, இப்போ என்னை புரிஞ்சுக்கிட்டாங்க. அதுதான், எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல்" என்கிறார் ஆசுவாசமாக.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.." - விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன் பதிவு வைரல்!

கூமாபட்டி... திடீரென தமிழ்நாட்டின் காஷ்மீர் என வைரலான கிராமம். மன அழுத்தமா இங்க வாங்க என ஒருவர் பேசிய வீடியோவை நம்பி இளைஞர்கள் பட்டாளமும் ஒன்று புறப்பட்டது. ஆனால் அங்கு நடந்தது என்னவோ வேறு. ஆம், அந்த ... மேலும் பார்க்க

குரங்கினால் தூக்கிச் செல்லப்பட்ட பூனைக்குட்டிக்காக கிராமமே காத்திருக்கும் சுவரஸ்யம் - என்ன நடந்தது?

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் பினாங்கோடு பகுதியில் உள்ள மக்கள் ஒரு பூனைக்குட்டியின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாள்களுக்கு முன்பு குரங்கு ஒன்று பினாங்கோடு குடியிருப்பு பகுதிக்க... மேலும் பார்க்க

”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் குழந்தைகள் - ஏன்?

"வகுப்பறை இல்லை, சீருடை இல்லை, தினமும் பள்ளி செல்ல வேண்டியதில்லை... உலகம் மட்டுமே அவர்களின் பாடம்" என்று தங்களின் மூன்று பெண் குழந்தைகளை வழக்கமான கல்வி பயிலும் நிலையில் இருந்து மாற்றியுள்ளனர் அமெரிக்க... மேலும் பார்க்க

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்; விரட்டிப் பிடித்த அதிகாரிகள் - 15 ரயில்களின் சேவை பாதிப்பு!

ரயில்கள் பல கிலோமீட்டர் தூரத்தில் வந்தாலே ரயில்வே லெவல் கிராசிங்கை மூடிவிடுவது வழக்கம். ஆனால் தெலங்கானாவில் ஒரு பெண் செய்த காரியம், ரயில்வே அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள ரங்கா ... மேலும் பார்க்க

கூமாபட்டி: `ஏங்ங்ங்க... ரீல்ஸை நம்பி வந்துராதீங்க!' - எச்சரிக்கும் அதிகாரிகள்.. பின்னணி என்ன?

கடந்த சில தினங்களாக இன்ஸ்டா கிராம், யூடியூப், எக்ஸ் என எந்த சமூக வலைதளத்தைத் திறந்தாலும் " ஏங்ங்ங்க... கூமாபட்டிக்கு வாங்க" என்று அழைக்கும் இளைஞரின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.மன அழுத்தமா கூமாபட்டிக... மேலும் பார்க்க

Rolls Royce: 1 வயது மகளுக்கு ரூ.5 கோடிக்கு கார் பரிசு; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒரு வயது மகளுக்கு ஐந்து கோடி மதிப்புள்ள ஆடம்பர காரை துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் பரிசளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சதீஷ் சன்பால் தன... மேலும் பார்க்க