செய்திகள் :

`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் மீண்டும் அதிர்ச்சி!

post image

கொங்கு மண்டலத்தில் நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘ZPE ATM’ எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் ஃபிரான்சைஸ் (Franchise) முறையில் ஏடிஎம் இயந்திரம் குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளனர்.

ஏடிஎம் (கோப்புப் படம்)

அதைப் பார்த்து தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அவர்களை தொடர்பு கொண்டுள்ளனர். “நாங்கள் வழங்கும் இயந்திரத்தில் வங்கி டெபிட் கார்டுகளை கொண்டும் பணம் எடுக்கலாம்,

மேலும் ஜிபே உள்ளிட்ட யுபிஐ மூலம் செலுத்தியும் பணமாக எடுக்கலாம். முதலீடுக்கு ஏற்றார் போல லாபம் கிடைக்கும். ஏடிஎம் இயந்திரத்தில் ஒவ்வொரு முறை பண பரிவர்த்தனை செய்யும்போதும் கமிஷன் கிடைக்கும்.” என்று கூறியுள்ளனர். அதை நம்பி 100க்கும் மேற்பட்டார் சுமார் 50,000 தொடங்கி பல லட்ச ரூபாய்களில் முதலீடு செய்துள்ளனர்.

உரிமையாளர்கள்

அதன் பிறகு தான் பிரச்னை எழுந்துள்ளது. அந்த நிறுவனம், “முதலீடு செய்த 45 நாள்களில் இயந்திரம் ஒப்படைக்கப்படும். பணத்தையும் நாங்களே நிரப்பிவிடுவோம்.” என்று கூறியுள்ளனர். 

அதன்படி முதலீடு செய்த சிலருக்கு ஏடிஎம் இயந்திரங்களை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு சில நாள்கள் மட்டுமே ஏடிஎம் வேலை செய்துள்ளது. பலருக்கு இயந்திரம் வேலை செய்யவில்லை. இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் பலமுறை கேட்டும் முறையான பதில் இல்லை. “பிரபலமானவர்களை எல்லாம் வைத்து விளம்பரம் செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள்

அதை நம்பி முதலீடு செய்தோம். இப்போது ஏமாற்றிவிட்டார்கள்.” என்று பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்... மேலும் பார்க்க

இருமல் மருந்து உயிரிழப்பு: தமிழக அரசு அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் வீடுகள் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (அக்.13) சோதனை நடத்தியிருக்கின்றனர். ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் இ... மேலும் பார்க்க

Cyber Crime: பேஸ்புக் காதலி சொன்ன ஆசை வார்த்தை; 74 வயது முதியவர் ரூ. 3 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

மும்பையில் வசிக்கும் 74 வயது முதியவர் ஒருவர் ஃபேஸ்புக் காதலி சொன்ன ஆலோசனையைக் கேட்டு ரூ.3.7 கோடியை இழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 74 வயது முதியவருக்கு ஃபேஸ்புக் மூலம் திவ்யா சர்மா என்ற பெண்ணின் அறிம... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: போலி ஆபாச வீடியோவைக் காட்டி MLA-விடம் ரூ.10 லட்சம் பறிப்பு; விவசாயி கைதான பின்னணி என்ன?

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வை ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சிவாஜி பா... மேலும் பார்க்க

மதுரை: கஞ்சா போதையில் அட்டகாசம்; ஆயுதங்களுடன் கும்பல் வலம்; கார், பைக், கடைகளை உடைத்து ரகளை

மதுரை மாநகரப் பகுதியிலுள்ள வண்டியூர், சௌராஷ்டிராபுரத்தில் கடந்த 10 ஆம் தேதி இரவு கஞ்சா போதையில் கையில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ரவுடிக் கும்பல் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது.க... மேலும் பார்க்க

விருதுநகர்: தீயணைப்புத் துறையினர் Gpay-ல் தீபாவளி வசூல்; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியது எப்படி?

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத் து... மேலும் பார்க்க