செய்திகள் :

விருதுநகர்: தீயணைப்புத் துறையினர் Gpay-ல் தீபாவளி வசூல்; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியது எப்படி?

post image

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்குக் கிடைத்த புகாரின் பேரில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கணக்கில் வராத ரூ. 59 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீயணைப்புத் துறை குடியிருப்பு வளாகத்திற்கு முன் காத்திருந்தனர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிச்சந்திரன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சோதனை செய்ததில் யார் யாரிடம் எவ்வளவு வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல்களைக் கொண்ட டைரி சிக்கியது.

மேலும் 59 ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்பு விசாரணையில் பட்டாசு கடைகள், தொழிற்சாலைகள், ஜவுளி கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஹரிச்சந்திரன், நவநீத கிருஷ்ணன், வினோத் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

தீயணைப்பு நிலையம்
தீயணைப்பு நிலையம்

பின்னர் தீயணைப்பு நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முதல் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் டைரியைச் சோதனை செய்ததில் தீபாவளி இனமாக வசூலித்த 4,38,500 ரூபாயில், 59,500 ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்தது தெரியவந்தது. லஞ்சப் பணத்தை நேரடியாக ஜிபே மூலம் வங்கி கணக்குகளிலும் பெற்றது லஞ்ச ஒழிப்புத்துறையினர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வசூல் செய்த மீதிப் பணமான 3 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை வினோத் என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தியதும், மொத்தமாக வசூல் செய்த பின்னர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லஞ்சம் வாங்குவதே பெரிய குற்றம் அதையும் தைரியமாக வங்கிக் கணக்கில் வாங்கி இருப்பது பேசுபொருளாக அமைந்துள்ளது.

மதுரை: கஞ்சா போதையில் அட்டகாசம்; ஆயுதங்களுடன் கும்பல் வலம்; கார், பைக், கடைகளை உடைத்து ரகளை

மதுரை மாநகரப் பகுதியிலுள்ள வண்டியூர், சௌராஷ்டிராபுரத்தில் கடந்த 10 ஆம் தேதி இரவு கஞ்சா போதையில் கையில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ரவுடிக் கும்பல் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது.க... மேலும் பார்க்க

"ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்" - இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

கேரள மாநிலம் கோட்டையம் தம்பலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அனந்து அஜி(24). இவர் திருவனந்தபுரத்தில் கடந்த 9-ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யும் முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில... மேலும் பார்க்க

திண்டுக்கல் : சாதி மாறி திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை - பெண்ணின் தந்தை கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் கறவை தொழில் செய்து வருகிறார்.கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவ... மேலும் பார்க்க

பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்து 7 வயது மாணவி பாலியல் வன்கொடுமை - ராஜஸ்தானில் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 7 வயது பள்ளி மாணவி கழிவறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அம்மாணவி கழிவறைக்கு சென்றபோது அங்கு மறைந்திருந்த நபர் மாணவியை பாலியல் வன்... மேலும் பார்க்க

விளையாட்டாக கேபிளை இழுத்த சிறுவன்; ட்ரில்லிங் மெஷின் நெற்றியில் துளைத்து பலி - கேரளாவில் சோகம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் மேற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த மகன் துருவ் நாத்துக்கு இரண்டரை வயது ஆகிறது. ... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையில் ஈடுபட்ட 2 புரோக்கர்கள் கைது; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்து வந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வி... மேலும் பார்க்க