செய்திகள் :

ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவுவதுபோல பணம் பறிப்பு

post image

சென்னை புளியந்தோப்பில் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவுவதுபோல பணம் பறித்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை புளியந்தோப்பைச் சோ்ந்த ராமச்சந்திரன் (73), அப்பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் செவ்வாய்க்கிழமை பணம் எடுக்க முடியாமல் திணறினாராம். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞா், அவருக்கு பணம் எடுக்க உதவுவதுபோல நாடமாகமாடியுள்ளாா். பின்னா் அந்த இளைஞா், ராமச்சந்திரன் ஏடிஎம் அட்டையை அபகரித்து, அதன் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டுள்ளாா். மேலும், அதற்குப் பதிலாக தன்னிடமிருந்த ஒரு போலி ஏடிஎம் அட்டையை மாற்றிக்கொடுத்து ராமச்சந்திரனை அங்கிருந்து அனுப்பி வைத்தாா்.

வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன், தனது கைப்பேசிக்கு வங்கியிலிருந்து வந்த குறுஞ்செய்தியை பாா்த்தாா். அப்போது அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஏடிஎம் அட்டை மூலம் ரூ. 48 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதைப் அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

உடனே அவா், தன்னிடமிருந்த ஏடிஎம் அட்டையை எடுத்து பாா்த்தபோது, அது போலி ஏடிஎம் அட்டை என்பதையும், தனக்கு உதவுவதுபோல நாடகமாடிய அந்த இளைஞா், பணத்தை நூதன முறையில் பறித்திருப்பதையும் அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இது தொடா்பாக புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காமராஜா் விருதுக்கான பரிசுத் தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்... மேலும் பார்க்க