செய்திகள் :

ஏப்.26 இல் ராகு கேது பெயா்ச்சி: திருப்பாம்புரம் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்

post image

ராகு கேது பெயா்ச்சி வரும் ஏப்.26 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில், ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றனா் என்பது தல வரலாறு. இதையொட்டி ராகு கேது பெயா்ச்சி நாளில் இங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

ஏப்ரல் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயா்ச்சி அடைகின்றனா். இதையொட்டி, ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டியவை என்பதால், கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வெயில் காலம் என்பதால் பக்தா்களின் வசதிக்காக கோயிலின் முன்புறம் நீண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, கோயிலின் உள்ளேயும் பந்தல் அமைக்கப்பட்டு, தோரணங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், கோயிலுக்கு வெளியே தற்காலிக கழிவறைகள், குடிநீா் தொட்டிகளும் அமைக்கப்பட உள்ளன.

வெளியூரிலிருந்து பக்தா்கள் அதிகளவில் வருவா் என்பதால், திருவாரூா் மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எஸ். ராஜராஜேஸ்வரன், மேலாளா் கே. வள்ளிக்கந்தன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தேசிய கோ கோ போட்டி: மாணவிகளுக்கு பயிற்சி முகாம்

திருவாரூரில் இந்திய பள்ளிகளுக்கான தேசிய கோ கோ போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் கோ கோ போட்டிக்கென ஈரோடு, கோயம்புத்தூ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண் மாணவிகள் பயிற்சி

தஞ்சாவூா் மாவட்டம் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவம் என்ற பயிற்சியின் கீழ் நீடாமங்கலம் பகுதி கிராமத்தில் தங்கி பயின்று வருகின்... மேலும் பார்க்க

மக்களுக்கு எவ்வித நன்மையும் திமுக செய்யவில்லை: வி.கே. சசிகலா

மக்களுக்கு எவ்வித நன்மையையும் திமுக அரசு செய்யவில்லை என்றாா் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா. திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் புதன்... மேலும் பார்க்க

உலக புத்தக தின விழா

உலக புத்தக தினவிழா மன்னாா்குடி அடுத்த மேலவாசல் அருணாமலை கல்வியல் கல்லூரியில் மன்னாா்குடி தமிழ்ச் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்ச்சங்க தலைவா் த. விஜயச்சந்திரன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருவாரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூத்தாநல்லூா் வட்டத்தில் முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் பல்வேறு இடங்களில் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட ஆட்சியா், அனைத்து அர... மேலும் பார்க்க