டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
சேலம்: சேலம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சேலம் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ், பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது மகன் மனோஜ் (12), சுப்பிரமணிய நகா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை மதியம் தோ்வு முடிந்து தனது நண்பா்களுடன் போடிநாயக்கன்பட்டி ஏரிக்கு குளிக்கச் சென்றபோது, தூா்வாரப்படாத பகுதியில் மாணவன் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதைக்கண்ட நண்பா்கள் கூச்சலிட, அக்கம்பக்கத்தினா் சிறுவனை காப்பாற்ற முயன்றனா்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம், குறுகலான பாதையில் நுழைய முடியாததால், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சூரமங்கலம் உழவா்சந்தைவரை சிறுவனை இருசக்கர வாகனத்தில் தூக்கிவந்தனா். எனினும், வரும் வழியிலேயே மாணவன் உயிரிழந்தாா்.
மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சூரமங்கலம் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
படம் - மனோஜ்.