செய்திகள் :

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

post image

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஏற்காடும் ஒன்று. இங்கு வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தமிழகத்தில் கோடைக் காலத்திற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. ஏற்காட்டிலும் கோடைக்காலத்திற்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஏற்காட்டில் காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. வார விடுமுறையைக் கொண்டாட ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் ஏற்காட்டின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர்.

ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் காலையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் ஏற்காட்டின் படகு இல்ல ஏரி, அண்ணா பூங்கா போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் நின்று புகைப்படம் எடுத்தும் பனிமூட்டத்தை குடும்பத்துடன் ரசித்தும் மகிழ்ந்தனர்.

முதல்முறை வெளிநாடு பயணம் செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

பாகிஸ்தானில் முதல் முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் அந்நாட்டு மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், மண்டி, பஹாவுத்தீன் மற்றும... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்! முகத்தில் உருவான ஓட்டை!

அமெரிக்காவில் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான பெண்ணின் முகத்தில் ஓட்டை உருவாகி அவருக்கு தற்போது 15க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இலினொயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூற... மேலும் பார்க்க

மசூதியில் குண்டு வெடிப்பு: தலைமை இமாமை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவாவின் மொந்ஷேரா மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

ஹரியாணா மாநிலம் அம்பலா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தின் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அம்பலா மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (மார்ச்.1) வழக்கு விசாரணைக்காக ஒரு நபர் ஆஜராகியுள்ளார். அப்போது... மேலும் பார்க்க

அசாம்: ரூ.2.2 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 2 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.2.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.சாச்சார் மாவட்டத்தில... மேலும் பார்க்க