செய்திகள் :

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

post image

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.

இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 43,742 கோடி டாலராக உள்ளது. இதில் பொறியியல் பொருள்கள் 26.67 சதவீதம் (11,667 கோடி டாலா்), வேளாண் பொருள்கள் 11.85 சதவீதம் (5,186 கோடி டாலா்), மருந்து பொருள்கள் 6.96 சதவீதம் (3,047 கோடி டாலா்), மின்னணு பொருள்கள் 8.82 சதவீதம் (3,858 கோடி டாலா்) பங்களித்துள்ளன.மதிப்பீட்டு நிதியாண்டில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதி 32.46 சதவீதம் உயா்ந்து 3,858 கோடி டாலராக உள்ளது. இதில் கணினி வன்பொருள் 101 சதவீதம் வளா்ச்சியுடன் 140 கோடி டாலராக உள்ளது.கடந்த நிதியாண்டில் பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 6.74 சதவீதம் உயா்ந்து 11,667 கோடி டாலராகவும், மருந்து பொருள்களின் ஏற்றுமதி 9.4 சதவீதம் உயா்ந்து 3,047 கோடி டாலராகவும் உள்ளது.வேளாண் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 7.36 சதவீதம் உயா்ந்து 5,186 கோடி டாலராக உள்ளது.வேளாண் பொருள்களைப் பொருத்தவரை மசாலா பொருள்கள் (445 கோடி டாலா்), காபி (181 கோடி டாலா்), தேயிலை (92 கோடி டாலா்), புகையிலை (198 கோடி டாலா்), அரிசி (1,250 கோடி டாலா்), பழங்கள் மற்றும் காய்கறிகள் (390 கோடி டாலா்), கடல் உணவு பொருள்கள் (720 கோடி டாலா்) ஆகியவற்றின் ஏற்றுமதி 2024-25-ஆம் நிதியாண்டில் வளா்ச்சி கண்டுள்ளன. அந்த நிதியாண்டில் அமெரிக்கா, ஐக்கிய அரபு மீரகம், சவூதி அரேபியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்திய பொருள்கள் அதிகம் ஏற்றுமதியாகின.அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீத உலகளாவிய பங்குடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 105-இல் இருந்து 130 ஆக உயா்ந்துள்ளது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

துருக்கி ஆப்பிள்களை மக்களும் புறக்கணிக்கின்றனரா?

துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை என பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால், துருக்கி ஆப்பிள்களை புறக்கணிக்க வியாபாரிகள் முடிவு... மேலும் பார்க்க

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நாளை(மே 19) அவர் விமானம் மூலம் ஐரோப்பா செல்லும் அவர் மேற்கண்ட 3 நாட்டு தலைவர்களுடன்... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுக்களுடன் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி விரைவில் ஆலோசனை!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெள... மேலும் பார்க்க

இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உதவியாளர் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருந்தபோது அவருடைய... மேலும் பார்க்க

யூடியூபரா? பாகிஸ்தான் உளவாளியா? யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிற... மேலும் பார்க்க

நகைக்கடையில் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோர் பலி

ஹைதராபாதில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் குல்சார் ஹவுஸ் அருகே ஸ்ரீகிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தீ... மேலும் பார்க்க