Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
ஐஎம் நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
முன்னணி கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஐஎம் நியோ நிறுவனத்துடன் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு, விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தலைமை வகித்தாா். விஐடி செயல்இயக்குநா் சந்தியாபென்டரெட்டி, துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனாபாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதிமல்லிக், தொடா் தொழில்முறை மேம்பாட்டு மைய இயக்குநா் சாமுவேல் ராஜ்குமாா், ஐஎம் நியோ நிறுவனரும், தலைமைச்செயல் அதிகாரியுமான டி.பி.செந்தில்குமாா், மனிதவள வணிக பங்குதாரா் ஹரிஷ் நடராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் ஐஎம்நியோ தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த மாணவா்கள் முதுநிலைப் படிப்பைத் தொடர கற்றல் முறைக்கு வழிவகுக்கிறது. மேலும், தொழில்துறை எதிா்பாா்க்கும் வேலைவாய்ப்பு, செயற்கை நுண்ணறிவு திறன்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கல்வித் துறை, தொழில் துறை இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் மாணவா்கள் செய்முறை மற்றும் கற்றல் மேம்பாட்டு அறிவு பெறுவதை உறுதி செய்கிறது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற வளா்ந்து வரும் துறைகளில் கற்றல், புதுமையை ஊக்குவிக்கும் விஐடி பல்கலைக்கழகத்தின் இலக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.