செய்திகள் :

ஐயாறப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா!

post image

பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் ஆலயம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இந்த கோயில் பெரிய கோயில் கட்டுவதற்கு முன்பு சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது. அப்பருக்கு கயிலை காட்சி அளித்த இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவினையொட்டி கடந்த 29ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலை மாலை என யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

பல மொழி சின்னதிரைகளில் நடிப்பது சிறந்த அனுபவம்: செளந்தர்யா ரெட்டி!

பல மொழிகளின் சின்னதிரை தொடர்களில் நடிப்பது சிறந்த அனுபவம் என நடிகை செளந்தர்யா ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் பிறந்திருந்தாலும் கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் தமிழ் மொழித் தொடர்களிலும் ச... மேலும் பார்க்க

மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்ட பிக் பாஸ் பிரபலங்கள்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மீண்டும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்காக பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிரு... மேலும் பார்க்க

மெளனம் பேசியதே தொடரிலிருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்!

நடிகர் லிவிங்ஸ்டன் மகளும் சின்னதிரை நடிகையுமான ஜோவிதா லிவிங்ஸ்டன், மெளனம் பேசியதே தொடரில் இருந்து விலகியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த அவர், தற்போது அத... மேலும் பார்க்க

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்.10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகக் கோயிலுக்கு வந்தனர்.தஞ்சாவ... மேலும் பார்க்க

இன்று யோகம் யாருக்கு!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.03-02-2025திங்கட்கிழமைமேஷம்:இன்று பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்க... மேலும் பார்க்க

சென்னை ஓபன் டென்னிஸ்: இன்றுமுதல் பிரதான சுற்று

சா்வதேச ஆடவா் டென்னிஸ் போட்டியான சென்னை ஓபனில் பிரதான சுற்று, திங்கள்கிழமை (பிப். 3) தொடங்குகிறது. 100 புள்ளிகளைக் கொண்ட ஏடிபி சேலஞ்சா் போட்டியான இது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் ... மேலும் பார்க்க