செய்திகள் :

``ஐஸ்வர்யா ராய் அழகு..'' -அழகாய் இருக்க ஆலோசனை கேட்ட பெண்... அமிதாப்பச்சன் சொன்ன `நச்' பதில்!

post image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக கணவன் மனைவி இடையே உறவு சரியில்லை என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து அமிதாப்பச்சனோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்த வித கருத்தும் தெரிவிப்பது கிடையாது.

அமிதாப்பச்சன் கோன் பனேகாகுரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக அவர் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 25-வது ஆண்டை குறிக்கும் வகையில் அவர் ஜூனியர் பிரிவு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பிரனுஷா தாம்பே என்ற இளம்பெண் அதில் கலந்து கொண்டார். அவர் அமிதாப்பச்சனிடம், ஐஸ்வர்யா ராயின் அழகு குறித்து பேசினார். அமிதாப்பச்சனிடம், சார் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். உடனே அமிதாப்பச்சன் ஆம் அவர் அழகு என்பது எனக்கு தெரியும் என்று தெரிவித்தார்.

அதற்கு அப்பெண், ஐஸ்வர்யா ராய் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவர் மிகவும் அழகு. சார் நீங்கள் அவருடன் தானே வசிக்கிறீர்கள். எனக்கு அழகாக இருக்க சில ஆலோசனைகள் சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அமிதாப்பச்சன், ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் முகத்தில் இருக்கும் அழகு சில ஆண்டுகளில் மறைந்து போகும். ஆனால் இருதயத்தில் இருக்கும் அழகுதான் மிகவும் முக்கியம்'' என்று தெரிவித்தார்.

அமிதாப்பச்சன்

ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்து ஒருபோதும் வெளியில் பகிர்ந்து கொண்டது கிடையாது. அதிகமான நேரங்களில் ஐஸ்வர்யா ராய் தனது மகளை அழைத்துக்கொண்டு கணவர் இல்லாமல் வெளிநாடு செல்வதுண்டு. இது குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் அதனை ஐஸ்வர்யா ராய் கண்டுகொண்டது கிடையாது. கடைசியாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் கூட ஐஸ்வர்யா ராய் தனியாகவே வந்து கலந்து கொண்டார்.

The Secret of Shiledars Review: புதையலைத் தேடும் ஷிலேதார்கள்; மிஸ்டரி ரகசியங்களைச் சொல்லி வெல்கிறதா?

வரலாறு குறித்துத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் ஷிலேதார்களுள் ஒருவரான டாக்டர் ரவி பட் (ராஜீவ் கந்தேல்வால்). பலரும் வாழையடி வாழை ஷிலேதாராக இருந்து சத்ரபதி சிவாஜியின் புதையலைப் பாதுகாத்த... மேலும் பார்க்க

``இந்திய பாஸ்போர்ட்டை பார்த்தும் நம்பவே இல்லை..." - அமெரிக்காவில் கைதானது குறித்து `கத்தி' வில்லன்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் கத்தி. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், அம... மேலும் பார்க்க

Ajithkumar: "விசில் அடித்துக் கொண்டாட நான் ஓடோடி வருவேன் அண்ணா"- நெகிழ்ந்த விவேக் ஓபராய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' என இரண்டு படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது.இதனிடையே சமீபத்தில் துபாயில் நடந்த கார்ரேஸில் கலந்துக... மேலும் பார்க்க

Udit Narayanan: `அது அசிங்கமான ஒன்று அல்ல!' - சர்ச்சைக்கு உதித் நாராயணன் சொல்லும் பதில் என்ன?

முன்னணி பாடகர் உதித் நாராயணன் குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது.சமீபத்தில், உதித் நாராயணனின் கான்சர்ட்டில் பாடிக் கொண்டிருக்கும்போது மேடையை நோக்கி அவரின் பெண் ரசிகர்கள் ... மேலும் பார்க்க

Shah Rukh Khan: "உங்களுடன் போட்டிப்போடுவது கடினம்..." - தென்னிந்திய நடிகர்கள் குறித்து ஷாருக்கான்

துபாயில் நடந்த குளோபல் வில்லேஜ் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், "எனக்குத் தென்னிந்தியாவில் நிறை... மேலும் பார்க்க

``சல்மான் கானை திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால்..'' -ரசிகரின் வேண்டுதல், அமீஷா பட்டேல் பதில்!

பாலிவுட்டில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நடிகராக இருப்பது சல்மான் கான் மட்டுமே. நடிகைகளில் அமீஷா பட்டேல், தபு, கங்கனா ரனாவத் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடிகர்களில் சல்மான் கான் போன்ற ஒ... மேலும் பார்க்க