செய்திகள் :

ஐ.நாவில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!

post image

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கிய உடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டும், பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமெனவும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தங்களது உரையில் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (செப். 26) நடைபெற்ற ஐ.நா.வின் அவைக் கூட்டத்தில் உரையாடினார். அப்போது, அவர் தனது உரையைத் துவங்கியதுடன், அங்கிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையை விட்டு வெளியேறினர்.

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையில் பங்கெடுக்க விரும்பவில்லை என்பதாலும், பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் அவர்கள் வெளிநடப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.

இத்துடன், இஸ்ரேல் பிரதமரின் உரையின்போது ஒன்றாக வெளியேற வேண்டும் என அவர்கள் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஐ.நா.வின் இந்தப் பொது அவைக் கூட்டத்தில் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!

As Israeli Prime Minister Benjamin Netanyahu began his speech at the United Nations General Assembly, prominent leaders and officials from various countries walked out of the chamber.

கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?

இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் பயணித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவ... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!

பாகிஸ்தானின் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரத... மேலும் பார்க்க

யேமன் தலைநகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது, கடந்த செப்.24 ஆம் தேதி ஹவுதிகள் நடத்த... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், உலக நாடுகளுக்க... மேலும் பார்க்க

ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சம்பாதித்து அசத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இளைய மகன் பாரன் டிரம்ப்பின் (19) சொத்து மதிப்பு கணிசமாக உயர்... மேலும் பார்க்க

இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்

தேடுபொறி தளமான கூகுள், ஒன்றைத் தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொண்டு முடிவுகளை அளிக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அதன் பின்னால் வெறும் தொழில்நுட்பம்தான் இருக்கிறதா? அல்லது யாரேன... மேலும் பார்க்க