செய்திகள் :

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விமர்சித்த ஈரான் அதிபர்!

post image

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை சமாளிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் விமர்சித்துள்ளார்.

ரஷியாவின் கசான் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெற்றது. அக். 22, 23 என இரு நாள்களுக்கு இந்த மாநாடு நடைபெற்றது. உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனர்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில் பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் பிரிக்ஸ் அமைப்பின் நாடுகளின் தலைவர்கள் குறித்து பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான்,

மத்திய கிழக்கு மோதலை சமாளிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டது. பாலஸ்தீனத்திற்குட்பட்ட காஸா பகுதி மற்றும் லெபனானில் உள்ள நகரங்களில் போர் நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையிலும் போர்த் தீ, நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்களிடம் குறிப்பிட்டார்.

உக்ரைன், காஸா, லெபனானில் அமைதி தேவை: ஐ. நா. பொதுச்செயலாளர்

எல்லைகளில் அமைதி தேவை என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இன்று (அக். 24) தெரிவித்தார். ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்பட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடம் அவர் இதனை வலியுறுத்... மேலும் பார்க்க

காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

காஸாவில் பள்ளியின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி... மேலும் பார்க்க

விடை பெற்றாா் டொமினிக் தீம்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரா்களில் ஒருவரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சா்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாா். கரோனா பாதிப்பின் போது, 2020-இல் யுஎஸ் ஓபன் போட்டியில் ஜொ்மன் வீரா் அலெக்ஸ் வெரேவை ... மேலும் பார்க்க

போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது -பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா்

‘எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது’ என்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும்,... மேலும் பார்க்க

எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதி

இந்திய-சீன எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் உறுதிபூண்டுள்ளனா். மேலும், ‘பரஸ்பர மரியாதை மற்றும் முதிா்ச்சியை வெளிப்படுத்துவதன் வாயிலாக இரு நா... மேலும் பார்க்க

இராக், சிரியா மீது துருக்கி வான்வழித் தாக்குதல்!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.அங்காராவின் ... மேலும் பார்க்க