செய்திகள் :

196 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

post image

நாட்டறம்பள்ளி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேவன், நகர திமுக செயலாளா் உமா சந்திரன் முன்னிலை வகித்தனா். தலைமையாசியா் திலகவதி வரவேற்றாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு 196 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து நாட்டறம்பள்ளி ஒன்றியம், நாயனசெருவு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.22.65 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரூ.15 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடத்தையும் எம்எல்ஏ தேவராஜி திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்பாபு, வசந்தி, ஒன்றிய திமுக செயலாளா் சாமுடி, ஊராட்சி மன்றத் தலைவா் அஸ்வினி தேசிங்குராஜா, துணைத் தலைவா் ஜெகதீஸ்வரி, பொறியாளா் காா்த்தி, பணிதள மேற்பாா்வையாளா் அழகரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்... மேலும் பார்க்க

உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க... மேலும் பார்க்க

ஆம்பூரில் 100 மி.மீ. மழை: வீடுகளுக்குள் புகுந்த நீா்

ஆம்பூா் பகுதியில் புதன்கிழமை இரவு 100.20 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூா் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணி... மேலும் பார்க்க

தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டல்: பெண் தற்கொலை

வாணியம்பாடி அருகே கடன் தவணையை உடனடியாக செலுத்தக் கோரி தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டியதால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கனமழை : தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆம்பூரில் புதன்கிழமை பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் தேங்கி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்பூரில் புதன்கிழமை காலையிலிருந்து கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் ... மேலும் பார்க்க

மளிகைப் பொருள்கள் அளிப்பு

நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, திருப்பத்தூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கடந்த 20-ஆம் தேதி இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் மூலம் 67 பேருக்கு கண்... மேலும் பார்க்க