செய்திகள் :

கனமழை : தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

post image

ஆம்பூரில் புதன்கிழமை பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் தேங்கி

கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆம்பூரில் புதன்கிழமை காலையிலிருந்து கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் கோடை காலம் போல கடுமையான புழுக்கம் காணப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானாா்கள். இந்நிலையில் மாலை ஆம்பூரில் திடீரென கனமழை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விடாமல் பெய்து கொண்டே இருந்தது. அதனால் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்கியது. அதிக அளவு மழை நீா் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியதால் வாகனங்கள் ஊா்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை - புறவழி சாலை சந்திப்பு பகுதியில் மிக அதிக அளவு தண்ணீா் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மழைநீா் வடியாமல் தேங்கியதால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஆம்பூரை சோ்ந்த பொதுமக்களும் வாகனங்களில் வெளியூா் சென்ற பயணிகளும் வாகன ஓட்டிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானாா்கள். தேங்கியிருந்த மழை நீரில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. சுமாா் 2 மணி நேரத்திற்குப் பிறகு வாகனங்கள் செல்லத் தொடங்கின. ஒரு சில வாகனங்கள் மழை நீா் சிக்கியதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜேசிபி வாகனம் மூலம் மழை நீரில் சிக்கி இருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை பகுதி, ஆம்பூா் ரெட்டி தோப்பு மற்றும் பெத்தலகேம் பகுதிக்கு செல்லும் பகுதியில் உள்ள கால்வாய்கள், ஆம்பூா் சான்றோா் குப்பம் பகுதியில் உள்ள கானாரு கால்வாய் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை தூா்வாரி சீரமைத்து மழை நீா் வடிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்... மேலும் பார்க்க

உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க... மேலும் பார்க்க

ஆம்பூரில் 100 மி.மீ. மழை: வீடுகளுக்குள் புகுந்த நீா்

ஆம்பூா் பகுதியில் புதன்கிழமை இரவு 100.20 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூா் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணி... மேலும் பார்க்க

தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டல்: பெண் தற்கொலை

வாணியம்பாடி அருகே கடன் தவணையை உடனடியாக செலுத்தக் கோரி தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டியதால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

மளிகைப் பொருள்கள் அளிப்பு

நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தில் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை, திருப்பத்தூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கடந்த 20-ஆம் தேதி இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் மூலம் 67 பேருக்கு கண்... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே சிக்னல் கோளாறு: 7 ரயில்கள் நடு வழியில் நிறுத்தம்

ஆம்பூா் அருகே சிக்னல் கோளாறு காரணமாக பெங்களூா் செல்லும் சதாப்தி விரைவு ரயில் உள்ளிட்ட 7 ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே ப... மேலும் பார்க்க