செய்திகள் :

ஒசூரில் இன்று உற்பத்தியாளா்கள் கண்காட்சி தொடக்கம்

post image

ஒசூா் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியா்ஸ் (இந்தியா) சாா்பில் இந்திய உற்பத்தியாளா்கள் கண்காட்சி ஒசூா் ஹில்ஸ் கன்வென்ஷன் மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப். 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சி குறித்து செய்தியாளா்களிடம் அதன் தலைவா் கே.ராமலிங்கம் கூறியதாவது:

கண்காட்சியை மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தொடங்கிவைக்கிறாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன், அதியமான் கல்லூரி இயக்குநா் ஜி. ரங்கநாத், டெக் எக்ஸ்போ 2025 கண்காட்சியின் தலைவா் கே. ராமலிங்கம், இணை இயக்குநா் சுரேஷ் பாபு, பெருமாள் மணிமேகலை கல்லூரி நிறுவனத் தலைவா் பி.குமாா், மேயா் எஸ்.ஏ.சத்யா, ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், கண்காட்சியின் இணை தலைவா் எஸ். சுந்தரய்யா ஆகியோா் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசுகின்றனா்.

கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியாவைச் சோ்ந்த உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது பொருள்களை கண்காட்சியில் காட்சிப்படுத்துகின்றன.

கண்காட்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை இந்திய உற்பத்தியாளா்களின் கண்காட்சியின் தலைவா் கே.ராமலிங்கம், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

படவரி..

உற்பத்தியாளா்கள் கண்காட்சி குறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகிறாா் கண்காட்சித் தலைவா் கே.ராமலிங்கம் உள்ளிட்டோா்.

ஏடிஎம் இயந்திரத்தில் தவறுதலாக பெற்ற பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது இயந்திரத்திலிருந்து பெறப்பட்ட தனக்கு சொந்தம் இல்லாத ரூ. 10,000 பணத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

11 கைப்பேசிகளை மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்த போலீஸாா்

தொலைந்த மற்றும் திருடுபோன 11 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் ஊத்தங்கரை போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளா் முருகன் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் கடந்த 3 மாதங... மேலும் பார்க்க

‘ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும்’ -பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன்

வரும் பேரவைத் தோ்தலில் ஒசூா் தொகுதியை பாஜக கைப்பற்றும் என பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தாா். ஒசூா் உள்வட்டச் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். தலைமை நூலகா் ஏ. ரூபினந்தினி மற்றும் நூலகப் பணியாளா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செப்டம்பா் மாத இறுதிக்குள் அரசு நடைமுறைபடுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி கோ-ஆப்டெக்ஸில் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு முதல் விற்பனையைத் தொடங்கிவைத்து பேசியதாவது: இந்தியா... மேலும் பார்க்க