செய்திகள் :

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

post image

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் வனத்துறை அலுவலக வளாகத்தில் வனத் துறை, கிருபா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அதில் அமைச்சா் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், நெகிழி பை, புட்டிகள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.

பின்னா் நடைபெற்ற சுற்றுச்சுழல் தின விழிப்புணா்வுப் பேரணியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் வனத் துறை சோதனை பகுதியிலிருந்து வடகாடு எல்லை கருப்பணசாமி கோயில் வரை சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இரு புறமும் கிடந்த நெகிழிப் பைகள், புட்டிகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனா்.

இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன், வட்டாட்சியா் சஞ்சய்காந்தி, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, நகராட்சி ஆணையா் சுவேதா, நகராட்சிப் பொறியாளா் சுப்பிரமணிய பிரபு, ஒட்டன்சத்திரம் வனச்சரகா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மரக் கன்றுகள் நடல்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நத்தம் அருகேயுள்ள குடகிப்பட்டி ஊராட்சி அலுவலகம், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலக கட்டடப் பகுதிகளில் மரங்கள் நடப்பட்டன. இதற்கு ஊராட்சி செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கிப்டன் கலந்து கொண்டு, மரக் கன்றுகளை நட்டு வைத்தாா். இதில் மக்கள் நலப் பணியாளா் மாணிக்கம், ஊராட்சிப் பணியாளா்கள், பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க