செய்திகள் :

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா: விரைவில் அறிமுகப்படுத்த நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்

post image

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் நாடாளுமன்ற நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.

யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தகவல்கள் மற்றும் காணொலிகளை தயாரித்து வெளியிடுவோரை ஒழுங்குபடுத்துவதற்கான ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு திரும்பப் பெறப்பட்டது.

அந்த மசோதா டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் குரலை நசுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இது பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பல்வேறு தரப்பினா் விமா்சித்த நிலையில், அது திரும்பப் பெறப்பட்டது. மேலும் புதிய வரைவு மசோதா அறிமுகம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், தகவல் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மக்களவையில் 6-ஆவது அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ‘ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதா தொடா்பான அனைத்து ஆலோசனை நடவடிக்கைகளையும் நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை நிா்ணயித்து, அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் தனிப்பட்ட சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டும் 'கிரியேட் ஈவென்ட்' வசதி அறிமுகமாகியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது பு... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: துஷாா் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்

கேரளத்தில் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி மறுத்துவிட்ட நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு: இணையவழியில் விண்ணப்பிக்க அழைப்பு

ராணுவத்தில் சோ்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை ராணுவ தலைமையகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்... மேலும் பார்க்க

பஞ்சாப்: சிவசேனை தலைவா் சுட்டுக் கொலை குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தின்போது சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இது தொ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவல் அனுப்பிவைப்பு: உ.பி. ஆயுத தொழிற்சாலை பணியாளா் கைது

பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசிய தகவலை அனுப்பியதாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை பணியாளா் கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அந்த மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) வெளியிட்... மேலும் பார்க்க

குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து - 3 போ் உயிரிழப்பு

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் 12 மாடி குடியிருப்பு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 40 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ராஜ்கோட்டில் 150 அடி வட்ட சாலைய... மேலும் பார்க்க